Skip to main content

Posts

Showing posts from April, 2017

மயிலாப்பூரில் பங்குனி உத்ஸவம் - 2017

ஒவ்வொரு ஆண்டும் சிவன் கோயில்களில் பங்குனி மாஸத்தில் உத்ஸவம் நடக்கும். ஸ்ரீ கற்பகாம்பாள் ஸமேத ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலும் இதற்கு விலக்கல்ல. இந்த வருஷமும் (2017) ஏப்ரல் 1-ஆம் தேதி (பங் 19) விழா ஆரம்பித்தது. அடுத்த நாள் கொடியேற்றம். பின்னர், 4-ஆம் நாள் திருவிழாவாக அதிகார நந்தி ஏப் 4 செவ்வாய் அன்று. நானும் விஜயாவும் சென்றோம். நல்ல கூட்டம் இருந்தும், நன்றாக தரிசித்தோம். காலை 6-45க்குப் போய் 8-45க்கு திரும்பினோம். சங்கீதாவில் இட்லி சாப்பிட்டோம். அடுத்து ஏப்ரல் 8-ஆம் தேதி (சனிக்கிழமை) தேர்த்திருவிழா. காலை 7-15 க்கு போய் ஆதம் தெருவில் நின்று கற்பகாம்பாளையும், கபாலீஸ்வரரையும் நன்கு தரிஸித்தோம். 8-45க்கு வீடு திரும்பினோம். ஏப்ரல் 9-ஆம் தேதி (ஞாயிறு) பகலில் 63- வர் உத்ஸவம். கூட்டம் மிக அதிகமாக இருக்குமாதலால், போக போவதில்லை