Skip to main content

Posts

Showing posts from March, 2013

ஸ்ரீ கபாலீஸ்வரர் அதிகார நந்தி

ஸ்ரீ கபாலீஸ்வரர் அதிகார நந்தி இன்று (20 மார்ச்) காலை பாங்கிற்கு (Bank) கிளம்பினோம். நடுவழியில்தான் தெரிந்தது, ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் இன்று அதிகார நந்தி என்பதும், போக்குவரத்து பல இடங்களில் திருப்பி விடப்படுகிறது என்பதும். பஸ்ஸை மந்தவெளி போஸ்ட் ஆஃபீஸ் அருகில் நிறுத்தி விட்டார்கள். நடக்க ஆரம்பித்தோம். தெற்கு மாட வீதி முனையில் (குமரன் கடை அருகில்) பெரிய பந்தல் போட்டு, ஸ்வாமி-அம்மனை அங்கு எழுந்தருளப் பண்ணியிருந்தார்கள். என்ன அழகான அலங்காரம் ! காண கண் கோடி வேண்டும். இன்று என்ன தவம் பண்ணினோமோ, அவன் அருளாலே அவன் தாள் வணங்கி வழிபட்டோம். புண்ணியம். நாலு வருஷங்களுக்கு முன்னால் நாங்கள் கற்பகம் அவென்யூவில் இருந்த போது, இதே பங்குனியில் விடியற்காலம் கோயில் சென்று ஸ்ரீ கற்பகாம்பாள் ஸமேத ஸ்ரீ கபாலீஸ்வரனை அதிகார நந்தியில் வணங்கி வழிபட்டோம். இன்றும், கூட்டமான கூட்டம்; திருஞான சம்பந்தருக்கு திருமுலைப் பால் வழங்கிய உத்ஸவமும் இன்று இருந்தபடியால், பல இடங்களில் பக்தர்களுக்கு சூடான பால் கொடுத்தார்கள். நிறைய பெண்மணிகள் கைகளில் தட்டு தட்டாக பக்ஷணங்கள், பழங்கள், புஷ்பம் போன்ற பல சீர்வரிசைகளை ஏந்தி, ம

ARJUN Mudi Irakkuthal -18-03-2013

குழந்தை அர்ஜுனுக்கு முடி இறக்குவதற்கு இரண்டு மாசங்களுக்கு முன்னதாக நாள் குறித்த போதிலும், அதை மூன்று முறை மாற்ற வேண்டியதாயிற்று. கடைசியில் மார்ச் 17-ஆம் தேதி கிளம்புவதாயும், 18-ஆம் தேதி (திங்கள்) முடி இறக்குவதாயும் நிச்சயித்தோம். ஏற்பாடுகள் பண்ணினோம். லாட்ஜுக்கு 18 ஃபிப் ஃபோன் பண்ணி 5 ரூம் கேட்டுக்கொண்டேன். துரை குருக்களுக்கும் ஃபோன் பண்ணி சொன்னேன். 9 மார்ச் TEMPO TRAVELLER (AC) க்கு சொன்னேன்; Balaji cabs, Besant nagar. அஷோக், நீரஜா பெங்களூரிலிருந்து 16-03 அன்று காலை வந்தனர். காயத்ரி படூரிலிருந்து ஸௌம்யா, ஸ்ரீராம் இவர்களை கூட்டிக் கொண்டு 16-03 காலை 10.00 மணிக்கும், அன்றிரவு அருண் பெங்களூரிலிருந்தும் வந்தனர். 17-03-2013 ஞாயிறு :    காலை எல்லாரும் எழுந்து, குளித்து ரெடியானோம். சாப்பிட்டோம். TSG மாமா மாமியும் இங்கேயே சாப்பிட்டனர். 11.00 மணிக்கு van -ல் கிளம்பினோம். ECR-ல் பயணித்தோம். புதுச்சேரி ஸ்ரீ சத்குரு ஹோட்டலில் பகல் 2-45க்கு தோசை சாப்பிட நிறுத்தினோம். பின்னர் கிளம்பி நேராக சிதம்பரம் கோயிலில் மாலை 5-15க்கு நிறுத்தி ஸ்வாமி தரிஸனம் பண்ணிக் கொண்டோம்.  இரண்டு மணி நேரம