Skip to main content

Posts

Showing posts from December, 2010

Vaithisvaran Koil - 2010

வைத்தீஸ்வரன் கோயில் எங்கள் குடும்பத்தினர் 11 பேரும் (குழந்தைகள் உட்பட) வைத்தீஸ்வரன் கோயிலுக்கு போக திட்டமிட்டு, இரண்டு கார்களில் செல்வதாக எண்ணம். அஷோக், நீரஜா இருவரும் பெங்களூரிலிருந்து வியாழன் டிசம்பர் 23 (2010) அன்று இரவு சென்னை வந்தனர். மறுநாள் காஞ்சிபுரம் சென்றோம். அடுத்த நாள் (சனிக்கிழமை, 25-12-2010) காலை இரண்டு கூட்டாக வை.கோயில் புறப்பட்டோம். சென்னையிலிருந்து சுமார் 267 கிமீ தூரத்தில் உள்ளது. ECR roadல் பயணித்தோம். அருண் காரில், அருண் குடும்பமும், அஷோக்-நீரஜாவும் 6-45க்கு கிளம்பினர். பிச்சாவரம் சென்றுவிட்டு, எங்களுடன் சேர்ந்து கொள்வதாக ப்ளான். அர்விந்த், கிருத்திகா, அதிதி, விஜயா, நான் ஆகியோர் காலை 11-15க்கு அர்விந்த் காரில் (LINEA) கிளம்பினோம். புதுச்சேரியை பகல் 2 மணிக்கு அடைந்து, அங்கு HOTEL SURGURU (SV Patel Road) வில் சுவையான லஞ்ச் சாப்பிட்டோம் (ரூ 83/-). அங்கிருந்து 2-45க்கு கிளம்பி, சிதம்பரத்தை 4-20 க்கு அடைந்தோம். அங்கு அருண் ஆகியோர் எங்களுடன் சேர்ந்து கொண்டனர். ஸ்ரீ நடராஜர் கோயிலை சுற்றிப் பார்த்தோம். நல்ல தரிஸனம் கிடைத்தது. மாலை ஏழு மணிக்கு சிதம்பரத்தை விட்டு

ஸ்ரீமத் பாகவதம் - 8-வது ஸ்கந்தம் ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன்

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் ஸ்ரீமத் பாகவதத்தின் 7-வது ஸ்கந்தத்தை நேற்று (28-12-2010) நிறைவு செய்தார். 7-வது ஸ்கந்தம் சென்ற நவம்பர் மாதம் 18-ஆம் தேதியன்று ஆரம்பித்தது. இன்று காலை (29-12-2010) 8-வது ஸ்கந்தத்தை ஆரம்பித்தார். 8-வது ஸ்கந்தத்தில், நான்கு கதைகள் சொல்லப்படுகின்றன. அதைத் தவிர மனுக்களின் வம்ஸாவழிகளும் சொல்லப்படுகின்றன. 1. கஜேந்திர மோக்ஷம்: முதல் மனு ஸ்வாயம்புவர்; பின்னர், 2-வது, 3-வது மனுக்களுக்கு பிறகு, 4-வது மனுவாக தாமஸர் என்பவர் இருந்தார். இவரது காலத்தில்தான், ஸ்ரீமன் நாராயணன் ஹரியாக உருவெடுத்து, முதலையின் வாயில் அகப்பட்டுக் கொண்ட கஜேந்திரன் என்கிற யானை ஆதிமூலமே என ஹரியை அழைக்க, கருடன் மீதேறி ஓடோடி வந்து தன் பக்தனை (யானையை) காப்பாற்றினார். 2. அமுதம் கடைந்தது: 6-வது மனுவின் (சாக்ஷூஷர்)  காலத்தில் இது நிகழ்ந்தது. மந்திர மலையை மத்தாக நாட்டி, வாஸூகி என்கிற பாம்பை கயிறாகச் சுற்றி, பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்தார். மந்திர மலை கடலில் அமிழ்ந்து விடாமல் இருக்க, தானே கூர்மாவதாரம் எடுத்து, மலையை கீழிருந்து தாங்கினார். கடலிலிருந்து காலகட்ட விஷம், ஐராவதம் என்கிற யானை,

காஞ்சிபுரம் - Kanchipuram Dec 2010

சென்ற வாரம் 2010, டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை யன்று நான், விஜயா, அஷோக், நீரஜா ஆகிய நால்வரும் காஞ்சிபுரம் சென்றோம். காலை 6-45க்கு அர்விந்த் காரில் பெஸண்ட்நகரிலிருந்து கிளம்பினோம். போரூர், ஸ்ரீபெரும்பூதூர் வழியாக சென்றோம். சென்னையிலிருந்து 68 கிமீ தூரத்தில் (காஞ்சியிலிருந்து 9 கிமீ) உள்ள ”வேடல்” என்ற கிராமத்தில்  முதலில் காரை நிறுத்தி அங்கு சங்கர மடத்தினர் புதிதாக அமைத்துக் கொண்டிருக்கும் சில பகுதிகளைப் -பார்த்தோம். இது சென்னை-பெங்களூர் சாலையில் சுமார் 68-வது கிமீட்டரில் L & T Factory (Blue color building) அடுத்து இருக்கிறது. சிவன் சிலையை ரோட்டிலிருந்தே பார்க்கலாம். சங்கரமடம் மற்றும் அதன் பக்தர்கள் இணைந்து 65 அடி உயர சிவன் சிலையும், 32 அடி உயர நந்தியையும் இங்கு உருவாக்கியுள்ளனர். சுப்பையா என்ற சங்கர மடத்தின் ஆஸ்தான ஸ்தபதி இந்தச் சிலைகளை உருவாக்கியுள்ளார். இதனை 18/10/2010 அன்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திறந்து வைத்து மக்களின் வழிபாட்டுக்காக அர்ப்பணித்தார்.   இந்த சிவன் பீடத்தின் அடியில் தஞ்சையில் இராஜராஜன் கட்டிய தஞ்சை பெரிய

ஸ்ரீ கிருஷ்ண லீலை - விஷாகா ஹரி

விஷாகா ஹரியின் ஸ்ரீ கிருஷ்ண லீலை சென்னை, செட்டிநாடு வித்யாஷ்ரம் ஸ்கூலில், குமாரராஜா முத்தையா ஹாலில் ஒவ்வொரு வருஷமும் JAYA TV நடத்தும் “மார்கழி மஹோத்ஸவம்” டிசம்பர் 1 ஆம் தேதி துவங்கி, 15 ஆம் தேதி முடிவடையும். ஒவ்வொரு வருஷமும் கடைசி நாளான டிச 15 ஸ்ரீமதி விஷாகா ஹரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பல வருஷங்களாக விஷாகாவின் கதா காலக்ஷேபத்துடன் இந்த விழா முற்றுப் பெறுகிறது. போன வருஷம் “குசேலோபாக்கியானம் ” நடந்தது. (படிக்க) இந்த 2010 வருஷமும் நேற்று (15-12-2010) மாலை விஷாகா ஹரியின் ஸ்ரீ கிருஷ்ண லீலை நடந்தது. இதைக் கேட்கவென்றே பெங்களூரிலிருந்து நான் ஓடோடி வந்தேன். நேற்று மாலை 4-30க்கு நானும் விஜயாவும் ஆட்டோ பிடித்து ஹாலிற்கு சென்றோம். 4-45க்கு ஹாலினுள் நுழைய அனுமதித்தனர். உள்ளே நுழைய 3-30 மணியிலிருந்தே க்யூ வரிசை நின்றதாக அறிந்தோம். வழக்கம்போல ரொம்பி வழியும் மக்கள் கூட்டம். தனது வழக்கமான் புன்னகையோடு விஷாகா ஹரி 6-45க்கு ஸ்ரீ கிருஷ்ண லீலை கதையை சொல்ல ஆரம்பித்தார். தியாகராஜரின் பிரபல “ஸாமஜ வர கமனா” (ஹிந்தோளம்) பாட்டுடன் ஆரம்பித்தார். உக்ரஸேனனின் மகனான கம்ஸன் எவ்வாறு தன் தங்கை தேவ கியின் முதல்