Skip to main content

Posts

Showing posts from November, 2011

ஸ்ரீமத் பாகவதம் 10 வது ஸ்கந்தம் - பகுதி 3 - ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன்

10வது ஸ்கந்தம் - பகுதி 3 வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் பாகவதத்தின் 10-வது ஸ்கந்தத்தை 25-03-2011 அன்று ஆரம்பித்தார். இந்த ஸ்கந்தத்தில் கண்ணனின் பிறப்பும், வளர்ப்பும், முடிவும் விஸ்தாரமாக சொல்லப்பட்டுள்ளன. இந்த ஸ்கந்தம் மிக நீளமானதால் (மொத்தம் 90 அத்தியாயங்கள் உள்ளன) இதை நான் மூன்று பகுதியாக பிரித்து எழுதுகிறேன். இது 3-வது பகுதி. ஜராசந்தன் வதம் : ஸ்ரீகிருஷ்ணன் இந்திரப்ப்ரஸ்தம் சென்று பாண்டவர்களுடன் இருந்தார். ஜராசந்தனை அழிக்க பீமனை கருவியாக்கிக் கொண்டு, பீமன் மூலம் ஜராசந்தனை அழித்தார். (10:72) பாண்டவர்கள் (தர்மபுத்திரர்) செய்த ராஜஸுய யாகத்தில் முதல் நமஸ்காரம் ஸ்ரீகிருஷ்ணனுக்குத் தான் செய்ய வேண்டும் என பாண்டவர்கள் விரும்பினார்கள்; ஆனால், சிசுபாலன் இதை எதிர்த்தான்.(10:73) ராஜஸுய யாகம் இங்கு நன்கு விளக்கி சொல்லப்படுகிறது. பாண்டவர்களின் அரண்மனையில் புகுந்த துரியோதனன் தண்ணீர் இல்லாத இடத்தில் தண்ணீர் இருப்பதாக நினைத்து நடந்ததையும், தண்ணீர் இருந்த இடத்தில் இல்லையென்று எண்ணி, வழுக்கி விழுந்ததையும் பார்த்து பீமன், திரௌபதி முதலானோர் அவனை பார்த்து சிரித்தனர். (10:75) சால்வா என்ற அ

ஸ்ரீமத் பாகவதம் 10 வது ஸ்கந்தம் - பகுதி 2 - ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன்

10 வது ஸ்கந்தம் பகுதி 2 வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் பாகவதத்தின் 10-வது ஸ்கந்தத்தை 25-03-2011 அன்று ஆரம்பித்தார். இந்த ஸ்கந்தத்தில் கண்ணனின் பிறப்பும், வளர்ப்பும், முடிவும் விஸ்தாரமாக சொல்லப்பட்டுள்ளன. மறுநாள் காலை கம்ஸனுடைய அரண்மனை சென்றபோது அங்கிருந்த குவலயாபீடம் என்னும் பெருத்த யானையை வீசி எறிந்து முடித்தான். பின்னர் 5 மாமல்லர்களையும் அழித்து முடித்தான். (10:43) கம்ஸவதம் : முதலில் சனூரா என்ற அசுரனுக்கும் கண்ணனுக்கும் மாபெரும் மல்யுத்தம் நடந்தது. பலராமன் முஷ்டிகா என்ற அசுரனுடன் போரிட்டார். ஸ்ரீகிருஷ்ணன் சனூராவை அழித்து முடித்தார். சனூரா,முஷ்டிகா, குதா,சாலா, டோசாலா என்னும் பல அசுரர்கள் மாண்டார்கள். கடைசியில், கம்ஸனும் மாண்டான். (10:44) ஸ்ரீகிருஷ்ணன் தன் தாய் தகப்பனாரை சிறையில் இருந்து விடுவித்து, உக்ரஸேனரை மீண்டும் மஹாராஜாவாக்கினார் (10:45) கண்ணன் திரும்ப வராததால் மிகுந்த சோகத்தில் இருந்த நந்தனையும், யசோதாவையும் ஆறுதல் கூறி தேற்றுமாறு உத்தவரை வ்ரஜா பூமிக்கு அனுப்பினார். அவரும் அவ்வாறே செய்தார் (10:46). உத்தவர் மதுரா திரும்பினார். (10:47) அக்ரூரர் ஹஸ்தினாபுரம் சென்று