Skip to main content

Posts

Showing posts from September, 2010

மயிலாப்பூர் இன்று.

இன்று (27-09-2010) மாலை மயிலாப்பூர் சென்றோம். அடுத்த பத்து நாட்களில் (அக் 8 ஆம் தேதி முதல்) நவராத்திரி பண்டிகை வர இருப்பதால், மயிலாப்பூர் இப்போதே களை கட்டி விட்டது. காதி கிராமோத்யோக் கடையிலும், வடக்கு மாட வீதி முழுதும் பொம்மைகள் குவிந்துள்ளன. எவ்வளவு பொம்மைக் கடைகள் ! அம்மாடியோவ். அழகு, அழகான பொம்மைகள். விலையைக் கேட்கவில்லை - மயக்கம் போட்டு விடுவேனோ என்ற பயம்தான். வடக்கு மாட வீதியில் உள்ள விஜயா பூஜைப் பொருட்கள் கடை என்னமாக ஜொலிக்கிறது! நவராத்ரிக்கு வேண்டிய சாமான்கள் கொட்டிக் குவிந்துள்ளன, வண்ண வண்ணமாக. அடுத்த வாரத்தில் கடையினுள் நுழைவதே கஷ்டமாக இருக்கும். கடை பெரிதாக்கப் பட்டுள்ளது. 2 - 3 வருஷங்களுக்கு முன்னால், இந்தக் கடை இவ்வளவு பெரியதாக இல்லை. சுக்ரா ஜுவல்லரியிலும் புதுப் புது வெள்ளி சாமான்கள் நவராத்திரி ஸ்பெஷல் குவிக்கப்பட்டுள்ளன. வழக்கம்போல கறிகாய்கள் நிறைய்ய இருந்தன. காலிஃப்ளவர், வெண்டைக்காய், கொத்தமல்லி வண்டி வண்டியாக இருந்தன. பழங்களும் இவ்வாறே - கொய்யா, வாழை, ஆப்பிள், திராக்ஷை, மற்றும் ஆச்சரியகரமாக ஸீதாப் பழங்கள் குவிந்திருந்தன. தேங்காய், புஷ்பங்களைப் பற்றி எழுதவே வேண்

ஸ்ரீ சங்கரா டீவி

சமீப காலமாக (19 Sept 2007) ஸ்ரீ சங்கரா டீவி என்னும் ஒரு புதிய சானல் துவங்கியுள்ளது. பங்களூரை தலைமையகமாகவும், சென்னையை Regional  அலுவலமாகவும் கொண்டு, முற்றிலும் ஆன்மீக, பக்தி, ஆலய விஷயங்களை ஒளிபரப்புகிறது, பல சமயங்களில் நேரடியாக (LIVE Telecast). தினமும் மாலை 6 மணிக்கு குருகுலம் என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. ஸ்ரீ ஸ்ரீனிவாஸன் என்னும் சம்ஸ்கிருத புரொஃபஸர் 15 சிறுமிகள் / சிறுவர்களுக்கு (எல்லாரும் 10-12 வயதிற்குள் இருக்கிறார்கள்) சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் சொல்லிக் கொடுக்கிறார். அவர் முதலில் சொல்ல, குழந்தைகள் அப்படியே திருப்பிச் சொல்கிறார்கள். தினமும் 2 அல்லது 3 Stanza க்கள் தான். முந்தின நாள் சொல்லிக் கொடுத்ததை அடுத்த நாள் ஆரம்பத்தில் மனப்பாடமாக எல்லாக் குழந்தைகளும் சொல்கிறார்கள்; பின்னர் அன்றைய புது ஸ்லோகங்கள் கற்றுக் கொள்கிறார்கள். சென்ற ஒரு மாதமாக நான் இதை பார்ப்பதை / கேட்பதை வழக்கமாக கொண்டுள்ளேன்; அப்போது ஸ்ரீ ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரம்   சொல்லிக் கொடுத்தார். பின்னர் சிவ மானஸா ஸ்தோத்ரம் . தற்போது (17-9-2010) பஜ கோவிந்தம் சொல்லிக் கொடுக்கிறார். இது முடியும் நிலையில் உள்ளது. அடுத்து கு

விநாயகர் சதுர்த்தி பண்டிகை

10-09-2010 வெள்ளிக்கிழமை  மாலை அர்விந்த், கிருத்திகா, அதிதி மூவரும் பெஸண்ட்நகர் வல்லப விநாயகர் கோயிலுக்கு அருகில் சென்று பிள்ளையார் பொம்மையையும் (50.00), புஷ்பங்கள், பழங்கள், பத்ரங்கள் ஆகியவற்றையும் வாங்கி வந்தனர். வீட்டுத் தோட்டத்திலிருந்து துளஸி, வில்வம், மாவிலை, அருஹம்புல் போன்ற பலவகையான பத்ரங்களை விஜயா பறித்து வந்தாள். 11-09-2010 சனிக்கிழமை  காலை எழுந்து, குளித்து, பிள்ளையாரை அலங்கரித்த பின்னர், நைவேத்யத்திற்கு கொழுக்கட்டை (2 விதம்), பாயஸம், வடை ஆகியவற்றை விஜயாவும், கிருத்திகாவும் செய்தனர். நான் மந்திரம் சொல்ல, அர்விந்த் பூஜை பண்ணினான். அருண்-காயத்ரியும், பெங்களூரில் அஷோக்-நீரஜாவும் இதே போன்று பூஜை முடித்தனர். தில்லி, தாணே, புணே, ஆகிய இடங்களிலும் விநாயகர் பூஜை சிறப்பாக நடந்தது. தங்கள் வீட்டில் மிக சிறப்பான முறையில் கொண்டாடியதை வாசு விரிவாக தன்னுடைய வ்லைப்பதிவில் எழுதியுள்ளான். 12-09-2010 மாலை 5 மணி அளவில் அர்விந்த், விஜயா, கிருத்திகா, அதிதி ஆகியோர் அருகிலுள்ள பெஸண்ட் நகர் கடற்கரைக்குச் சென்று, பிள்ளையாரை பிரியாவிடை கொடுத்து அனுப்பினோம். அதிதிக்கு ஒரே குறை - நம் வீட்டிலேயே வைத

விநாயகர் சதுர்த்தி

பாத்ரமாத சுக்ல பக்ஷ சதுர்த்தியை விநாயக சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். அன்று காலை எழுந்து சுத்தமாக குளித்து விட்டு, வீட்டை பெருக்கி, மெழுக வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்ட வேண்டும். ஒரு மண்டபம் அல்லது சுத்தமான ஒரு பலகையில் தலைவாழை இலை போட்டு அதன்மேல் நெல் அல்லது பச்சரிசி போட்டு பரப்பி, அதில் ஒரு தாமரையை வரைந்து, அதன் மேல் களிமண்ணால் ஆன பிள்ளையாரை வைத்து அருஹம்புல், சந்தனம் இன்னும் பலவித இலைகள், பூக்கள் ஆகியவற்றால் பூஜை செய்து, தூப, தீபம் காண்பித்து, நெய்யில் செய்த கொழுக்கட்டை (மோதகம்), மாவுப்பலகாரங்கள், தேங்காய், வாழைப்பழம், நாவல் பழம், விளாம்பழம், கொய்யாப்பழம், கரும்புத்துண்டு, வெள்ளரிக்காய், அப்பம், இட்லி, முதலானவற்றை நிவேதனம் செய்து, தீபாராதனை காட்டி பூஜையை முடிக்க வேண்டும். 11-09-2010 சனிக்கிழமை காலை சுமார் 1010 மணி வரை திருதியை இருப்பதால், ராகுகாலம் சென்றபிறகு, 10-30க்கு மேல் விநாயகர் பூஜையை ஆரம்பிக்க வேண்டும். விநாயகருக்கு உகந்த 21 விதமான இலைகள்: 1. மாசிப்பச்சை, 2. கணடங்கத்திரி, 3.பில்வம் , 4. அருஹம்புல் , 5. ஊமத்தை, 6. இலந்தை, 7. நாயுருவி, 8. துளஸி , 9. மாவிலை, 10.

Annai Velankanni Shrine, Besantnagar

All of us would have heard about the Annai Velankanni Shrine , near Nagapattinam. Hundreds of thousands of devout Christians and Hindus alike visit this shrine to have the blessings of Virgin Mary, Our Lady of good Health. ஆரோக்கிய மாதா.   நாகப்பட்டினத்தில் மூன்று அற்புதங்கள் நிகழ்ந்தன. முதல் அற்புதம் 16-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்தது. ஒரு ஹிந்து சிறுவன் பாத்திரத்தில் பால் எடுத்துச் சென்றபோது, ஒரு பெண்மணி அவனிடம் வந்து தன் குழந்தைக்குப் பால் கொஞ்சம் தருமாறு கேட்க, அவனும் கொடுத்தான். பின்னர் வீட்டிற்குச் சென்ற பையன் இந்த நிகழ்ச்சியை எல்லாரிடமும் சொன்னான்; பாத்திரத்தை திறந்து பார்த்தால் அதில் பால் நிறைய தளும்பிக் கொண்டிருந்தது. வந்த பெண்மணி அன்னை மேரி மாதா என உணர்ந்து அன்னை தோன்றிய இடத்தில் ஒரு ஓலைக் கு டிசையில் மாதாவிற்கு சிறிய அளவில் கோயில் கட்டினார்கள். அற்புதம் நிகழ்ந்த குளம் “மாதா குளம்” என அழைக்கப்படுகிறது. 2-வது அற்புதம்: 16-ஆம் நூற்றாண்டு இறுதியில் வேளாங்கண்ணியில் ஒரு ஏழை பெண்மணி தன் பையனுடன் இருந்தாள். பையனுக்கு பிறவியிலேயே கால் ஊனம்; நடக்க இயலாது. தினமும் அவன் “நடுத்திட்டு”