Skip to main content

Posts

Showing posts with the label Gavarapattu

VAITHISWARAN KOIL Jan 2018

வைத்தீஸ்வரன் கோயில் 2018 ஜனவரி 15 ஆம் தேதி யன்று வை. கோயில் போகலாம் என எண்ணம் உதித்தது. நிறைய பேருக்கு ஃபோன் பண்ணி விஷயங்களை அறிந்து கொண்டோம். அங்கு ஸ்ரீகிருஷ்ணா ரெஸிடென்ஸி என்னும் லாட்ஜில் தங்க ஃபோன் பண்ணி ரூம் புக் பண்ணினோம். லலிதா குமாரை கேட்டபோது, அவர்களும் வருவதாக சொன்னார்கள். ஸ்ரீ பாலாஜி cabs ல் டாக்ஸி புக் பண்ணினோம். கிமீ 11 ரூ. 22 ஜனவரி திங்கட்கிழமை காலை 7 மணிக்கு ரெடியானோம். லலிதா குமார் 7-30 க்கு வந்தனர். டிரைவரும் அப்போதுதான் வந்தார். 7-40 க்கு கிளம்பினோம். ECR வழியாக சென்றோம். நடுவில் ஓரிடத்தில் நிறுத்தி இட்லி சாப்பிட்டோம். (வீட்டில் விஜயா பண்ணினாள்). நேராக கடலூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு போனோம். பத்து நிமிஷங்களில் ஸ்ரீ தேவநாதன் குருக்கள் வந்தார். இவருடைய ஃபோன் எண்ணை வாசு வாங்கி தந்தான். அவரிடமும் ஏற்பாடுகள் செய்தான். அவர் அர்ச்சனை பண்ணிவிட்டு, பிரசாதங்கள் கொடுத்தார். 1/2 கிலோ சக்கரை பொங்கல், 1/2 கிலோ புளியோதரை, 1/2 கிலோ தயிர்சாதம் சொல்லியிருந்தேன். பாத்திரங்களும் கொண்டு போயிருந்தோம். நிறய்ய பண்ணியிருந்தார். கொடுத்தார். அங்கேயே, அன்னதான கூடத்தில் இலை போட்டு சாப்...

சீதாலக்ஷ்மி மன்னி.

எங்கள் சொந்த கிராமம், கவரப்பட்டு என்பது. இது சிதம்பரத்திலிருந்து கிழக்கில் 8 கிமீ  தூரத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம். இங்குதான் என் தாத்தா, அப்பா, அவரது சகோதரர்கள் வசித்தனர். பின்னால், எங்கள் சித்தப்பா மட்டும் இருந்தார். நாராயணஸ்வாமி [ நாணா ] சித்தப்பாவிற்கு இரண்டு ராஜம், ஜெயம் என்கிற இரண்டு புத்திரிகளும், சுந்தரராமன் (சுந்தரம்) என்கிற புத்திரனும். சுந்தரம் அண்ணாவின் மனைவி சீதாலக்ஷ்மி. அண்ணா - மன்னிக்கு பாஸ்கர் என்கிற ஒரே புத்திரன். இந்த சீதாலக்ஷ்மி மன்னி இந்த வருஷம் 2014 ஃபிப்ரவரி 25 -ஆம் தேதி காலை மரணமடைந்தார், வயது 78-80 இருக்கும். 10-ஆம் நாள் காரியத்திற்கு போகலாம் என்று நானும், விஜயாவும் முடிவெடுத்தோம். சாவித்திரியும், மங்களமும் வருவதாக சொன்னார்கள். டாக்ஸி ஏற்பாடு செய்துகொண்டு [கிமீ ரூ. 9.00] மார்ச் 5-ஆம் தேதி (புதன்) காலை 11-20க்கு கிளம்பினோம். வழியில் ம்ங்களம், அடுத்து சாவித்திரி என அழைத்துக் கொண்டு, திண்டிவனம், பண்ருட்டி, நெய்வேலி வழியாக சிதம்பரம் சென்றோம். கீழ வீதியில் இருக்கும் குஞ்சிதபாதம் தீக்ஷிதர் வீட்டு மாடியில் தங்கினோம். இரவு தூங்கினோம். மறுநாள் மார்ச் 6...

கவரப்பட்டு கிராமம் - ஸீதா கல்யாணம்

கவரப்பட்டு என்னும் கிராமம் சிதம்பரத்திலிருந்து சுமார் 6-7 கிமீ தூரத்தில் உள்ளது. இதுதான் எங்கள் “சொந்த ஊர்” எங்கள் அப்பாவின் இனிஷியலான G என்பது இந்த கிராமத்தைத்தான் குறிக்கிறது. இங்கு எங்கள் தாத்தா (ராமசேஷ ஐயர்) வசித்து வந்தார். (அவர் காலமானதும் இங்குதான்) அவருக்கு முன்பு அவரது தந்தை - எங்கள் கொள்ளுத்தாத்தா ஸ்ரீமான் நடராஜ ஐயரும் இந்த கிராமத்தில் தான் வசித்திருக்க வேண்டும். எங்கள் தாத்தா ஸ்ரீமான் ராமசேஷ ஐயர் எங்கள் தாத்தா ஒரு ராமர் உருவப்படத்திற்கு பூஜைகள் செய்து வந்தார். இந்தப் படத்தை அவர் பின்னால் ஊருக்கே அன்பளிப்பாக கொடுத்து விட்டார். ஸ்ரீ ராம நவமியின் போது இந்தப் படத்திற்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். முதலில் ஸ்ரீராமநவமி உத்ஸவம் வீடுகளில் நடைபெற்று வந்தது; பின்னர், கிராமத்து பக்தகோடிகள் பணம் திரட்டி ஒரு கட்டிடத்தை கட்டி அதில் ஸ்ரீராமரை வைத்து ராமநவமியை கொண்டாட ஆரம்பித்தனர். ராமர் மடம், கவரப்பட்டு 150 வருஷங்களாக இந்த ஸ்ரீராம நவமி உத்ஸவம் கவரப்பட்டு கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு (2011) 151-வது உத்ஸவம். ஜனனோத்ஸவமாக ஸ்ரீராம நவமி திதி தொடங்கி 10 நாட்கள் கோலாகலமாக நடக்கிறத...