Skip to main content

Posts

Showing posts with the label Maruntheesvarar Koil

தங்கத்தேர் இழுத்தோம் - 2011

இன்று (14-01-2011) வெள்ளிக்கிழமை மாலை ஸ்ரீ மருந்தீஸ்வரர் கோயிலில் நாங்கள் தங்கத்தேர் இழுத்தோம். இது அருண்-காயத்ரியின் வேண்டுதல். 6-45க்கு நான், விஜயா, கிருத்திகா, அதிதி, சதீஷ் ஆகியோர் காரில் கோயிலுக்கு. கிளம்பினோம். மருந்தீஸ்வரர் - திரிபுரசுந்தரி அம்மன் கோயில் பழமையான கோயில். அங்கு, அருண், காயத்ரி, ஸௌம்யா, ஸ்ரீராம் ஆகியோரும், பாலு மாமா, மாமி, ரமணா, அர்ச்சனா, அவர்கள் குழந்தை, மீனாவின் குழந்தை, அவள் மாமனார், மாமியார் (மீனா வரவில்லை), காயத்ரியின் இரண்டு சித்தப்பாக்கள், கணேஷ், சுகவனம், சுதா, சந்தர், தனுஷ், தர்ஷிணி, சந்தரின் அம்மா, சரோஜா, ராஜி மாமி, கிரிஜா மாமி (இவர்கள் இருவரும் சரோஜாவின் அபார்ட்மெண்டில் வசிப்பவர்கள்) ஆகியோர் வந்தனர். 7-30 மணிக்கு தேர் ஆயத்தமானது. சுக்கிரவார அம்மனை தேரில் ஏற்றி கற்பூர தீபாராதனைக்கு பின் தேர் இழுத்தல் துவங்கியது. மொத்தம் 4 உபயதாரர்கள். ஒவ்வொருவரும் 1/4 சுற்று இழுக்கவேண்டும்; அருண் இரண்டாவதாக இழுத்தான்; நாங்களும் சேர்ந்து கொண்டோம். இழுத்து முடிந்து, அர்ச்சனை, தீபாராதனைக்கு பின்னர் கேஸரி பிரஸாதம் வழங்கப்பட்டது. அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்ட பின்னர் எல்லா...