Skip to main content

ஸ்ரீ கபாலீஸ்வரர் அதிகார நந்தி

ஸ்ரீ கபாலீஸ்வரர் அதிகார நந்தி

இன்று (20 மார்ச்) காலை பாங்கிற்கு (Bank) கிளம்பினோம். நடுவழியில்தான் தெரிந்தது, ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் இன்று அதிகார நந்தி என்பதும், போக்குவரத்து பல இடங்களில் திருப்பி விடப்படுகிறது என்பதும். பஸ்ஸை மந்தவெளி போஸ்ட் ஆஃபீஸ் அருகில் நிறுத்தி விட்டார்கள். நடக்க ஆரம்பித்தோம்.

தெற்கு மாட வீதி முனையில் (குமரன் கடை அருகில்) பெரிய பந்தல் போட்டு, ஸ்வாமி-அம்மனை அங்கு எழுந்தருளப் பண்ணியிருந்தார்கள். என்ன அழகான அலங்காரம் ! காண கண் கோடி வேண்டும். இன்று என்ன தவம் பண்ணினோமோ, அவன் அருளாலே அவன் தாள் வணங்கி வழிபட்டோம். புண்ணியம்.

நாலு வருஷங்களுக்கு முன்னால் நாங்கள் கற்பகம் அவென்யூவில் இருந்த போது, இதே பங்குனியில் விடியற்காலம் கோயில் சென்று ஸ்ரீ கற்பகாம்பாள் ஸமேத ஸ்ரீ கபாலீஸ்வரனை அதிகார நந்தியில் வணங்கி வழிபட்டோம்.

இன்றும், கூட்டமான கூட்டம்; திருஞான சம்பந்தருக்கு திருமுலைப் பால் வழங்கிய உத்ஸவமும் இன்று இருந்தபடியால், பல இடங்களில் பக்தர்களுக்கு சூடான பால் கொடுத்தார்கள்.

நிறைய பெண்மணிகள் கைகளில் தட்டு தட்டாக பக்ஷணங்கள், பழங்கள், புஷ்பம் போன்ற பல சீர்வரிசைகளை ஏந்தி, மேள தாளத்துடன் தங்கள் வீட்டு சொந்த கல்யாணம் போல சென்று ஸ்ரீ கபாலீஸ்வரனுக்கு அளித்த காக்ஷி, ஓ, என்ன ஒரு பக்தி !

மயிலாப்பூரே விழாக் கோலமாக காட்சி அளிக்கிறது. 24-ஆம் தேதி திருத்தேர்; 25-ஆம் தேதி அறுபத்துமூவர் உத்ஸவம். 27ஆம் தேதி திருக்கல்யாணம். எல்லாரும் மயிலாப்பூர் வாருங்கள் ! சிவபெருமானின் அருளாசிகளை பெற்றுச் செல்லுங்கள்.

மயிலாப்பூர், மயிலாப்பூர்தான்.   ராஜப்பா 2:00 PM 20 March 2013

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை