Skip to main content

அஷோக் புது வீடு கிருஹப் பிரவேசம்

அஷோக் புது வீடு கிருஹப் பிரவேசம்

அஷோக் தான் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு கிருஹப் பிரவேசம் செய்தான். 80% முடிந்த நிலையில், 2007 ஆகஸ்ட் 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடந்தது.

நானும் விஜயாவும் ஆகஸ்ட் 28ஆம் தேதி இரவு 10 மணிக்கு பெங்களூர் போனோம். அருண், அர்விந்த் ஆகியோர் 30ஆம் தேதி விடியற்காலை வந்தனர். காயத்ரியின் அப்பா, அம்மாவும் வந்தனர். அன்று காலை 11 மணிக்கு சாவித்திரி ஹோசூரிலிருந்து வந்தாள். இரவு சுகவனமும் கிரிஜாவும் வந்தனர். எல்லாருக்கும் சாப்பாடு "ஐயங்கார்” கடையிலிருந்து தருவித்தோம்.

அஷோக் மற்றும் நீரஜா இருவரும் நாலு, ஐந்து மாசங்களாகவே அலுக்காமல் சலிக்காமல் புது வீட்டிற்கென ஓடி ஓடி வேலை செய்தனர். கடைசி 7 நாட்களில் தினம் தினம் 5,6 முறையாவது புது வீட்டிற்குச் சென்று வேலை பண்ணினார்கள். அவர்களது அயராத உழைப்பு ஆகஸ்ட் 31ஆம் தேதி கண்கூடாகத் தெரிந்தது.

30 ஆம் தேதி ஏழு எட்டு தடவையாவது அஷோக் தன்னுடைய புது வீட்டிற்குச் சென்று GAS போன்ற சாமான்களை வைத்து விட்டு வந்தான். அஷோக், நீரஜா இருவரது முகங்களிலும் ஒருவித TENSION காணப்பட்டது.

















31 ஆம் தேதியும் விடிந்தது - காலை 2-30க்கே எழுந்து நாங்கள் 4 பேரும் குளித்தோம். 4 மணிக்குள் எல்லாரும் குளித்து, ரெடியாகி விட்டோம். மூன்று குழுக்களாக 5-30க்குள் புது வீடு போய்விட்டோம். முதலில் கோ-பூஜை நடந்தது. பசுவிற்கும் அதன் கன்றுக்கும் அஷோக் - நீரஜா பூஜை

செய்தனர். பின்னர் நாங்கள் நாலு பேரும் ஆளுக்கொரு ஸ்வாமி படங்களை எடுத்துக்கொண்டு நாலு மாடி ஏறி புதுவீடு புகுந்தோம்.

கணபதி ஹோமம், நவக்ரக ஹோமம் ஆகியவை சிறப்பாக நடந்தேறின.


















ஸ்ரீவித்யா, பசுபதி, ஆனந்த், ஜனனி, ராம்சுந்தர், ரமணா ஆகியோர் விழாவிற்கு வந்து கலந்து கொண்டனர். நீரஜா பக்கத்திலிருந்து, அவளது அப்பா, அம்மா தவிர, அவளது சித்தி, சித்தப்பா, கிரி மாமா, மாமி, ஜயஸ்ரீ மாமி, மாலா சித்தி ஆகியோர் வந்தனர். ப்ரசன்னா டில்லியில் இருந்ததால் அவனால் வர முடியவில்லை.

காலை 8 மணிக்கு கேசரி, இட்லி, பொங்கல், வடை சிற்றுண்டி - சுமார் 50 பேர் சாப்பிட்டோம். பகல் 12 மணியளவில் விருந்து சாப்பாடு. 40-45 பேர் சாப்பிட்டோம். பின்னர் ஒவ்வொருவராக வீடு திரும்ப ஆரம்பித்தனர். சாவித்திரியுடன் சுகவனம் கிரிஜா இருவரும் ஹோசூர் சென்றனர். வீட்டை கூடியவரையில் ஒழித்துக்கொண்டு எல்லாரும் 5 மணிக்குள் BTM வீட்டிற்கு வந்தோம்.

அன்றிரவு ரயிலில் அருண், காயத்ரி, ஸௌம்யா, GBS, மாமி ஆகியோர் சென்னை புறப்பட்டனர். அஷோக் நீரஜா இருவரும் புது வீட்டிற்கு போய் படுத்துக்கொண்டனர்.

இவ்வாறாக, கிருஹப்பிரவேசம் மிக மிக நல்லமுறையில், ஒருவிதமான குறைபாடுகளும் இல்லாமல் நடந்தது. அஷோக் நீரஜா முகங்களில் மீண்டும் சிரிப்பு பூத்தது. அவர்கள் உழைத்த உழைப்பிற்கு மிக பிரமாதமாக நடந்தேறியது.

கடவுள் அவர்களை ஆசீர்வதிக்கட்டும்.

ராஜப்பா

இரவு 9 மணி, 7-9-2007

பின்குறிப்பு:: அர்விந்த், கிருத்திகா, அதிதி செப் 2ஆம் தேதியன்றும், நானும் விஜயாவும் செப் 6ஆம் தேதியன்றும் சென்னை புறப்பட்டோம்.
Ashok, Gruha Pravesam

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை