Skip to main content

ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோயில் Sri Parthasarathy Perumal Koil

SRI PARTHASARATHY PERUMAL KOIL, TIRUVALLIKKENI
ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோயில், திருவல்லிக்கேணி

நேற்று (08-மே-2008) மாலை 5-15 மணி அளவில், நானும் விஜயாவும் சும்மா "நடை பயில" (walking) புறப்பட்டோம். திடீரென எனக்கு "கோயிலுக்குப் போகலாமே" எனத் தோன்றியது. உடனடியாக 21L பஸ் பிடித்து, கண்ணகி சிலை நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டோம்.

பஸ் வந்த வழியே திரும்பி நடந்து - அடுத்த முறை விவேகானந்தர் இல்லத்திலேயே இறங்கிக் கொள்ளவேண்டும் - சுங்குவார் தெருமுனையில் உள்ள "கீழக் கோபுர நுழைவாயிலின்" வழியாக நடக்க ஆரம்பித்தோம். 5 நிமிட நடைக்குப் பிறகு, கோயில் குளம் தென்பட்டது - குளத்தில் தண்ணீர் இருக்கிறது.

ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நாங்கள் நுழையும்போது மாலை 6 மணி. பிரம்மோத்சவம் நடைபெற்றுக் கொண்டுள்ளது. உத்சவ மூர்த்திக்கு மங்களாசாசனம் பண்ணிக்கொண்டிருந்தனர். நிறையக் கூட்டம்.

Sri Parthasarathy Perumal

கோயில் உள்ளே கூட்டம் இல்லை. பெருமாளுக்கு மிக அருகில் நின்று கொண்டு தரிசித்தோம். மனசுக்கு மிக சந்தோஷமாக இருந்தது. ஸ்ரீவேதவல்லித் தாயாரையும் தரிசித்து, ஆண்டாள், யோக நரசிம்ஹர் சன்னதிகளிலும் மனமார வேண்டிக்கொண்டு, கோயிலை விட்டு வெளியே வரும்போது 6-45 மணி.

Shri Yoga Narasimhar (அழகியசிங்கர்)

தெற்கு மாட வீதி, TP Koil street வழியாக நடந்தோம். திருவல்லிக்கேணியின் பழமை வாய்ந்த, புகழ்பெற்ற தெருக்களை ரசித்துக் கொண்டிருந்தோம். TP கோயில் வீதியில் மஹாகவி பாரதியார் நினைவு இல்லம் இருப்பது தெரிந்ததே.

இடப்பக்கம் திரும்பி, தி-கேணியின் புகழ்பெற்ற வீதியோர கறிகாய் கடைகளை பார்த்துக் கொண்டே, திருவல்லிக்கேணி High Road சென்றோம். இந்த வீதியில் ரத்னா கபே (படிக்கவும்) இருப்பது யாவரும் அறிந்ததே. ரத்னா கபேயை பார்த்து விட்டு, உள்ளே போகாமல் இருக்க முடியுமா? என்னால் முடியாது. இரண்டு இட்லிகளும், தூக்குவாளி நெறய்ய சாம்பாரும் சாப்பிட்ட பின்னர், ஆட்டோ பிடித்து வீடு திரும்பினோம்.

மயிலாப்பூர் போலவே, திருவல்லிக்கேணியும் கலாச்சார பாரம்பரியம் நிறைந்த தொன்மையான அழகிய இடம். ஒரு காலத்தில் திருவல்லிக்கேணி மயிலாப்பூரின் ஒரு பகுதியாகவே இருந்தது உங்களுக்குத் தெரியுமா?

{Tiruvallikkeni Ratna Cafe)
ராஜப்பா
11.00 காலை 09-05-2008

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை