Skip to main content

மெரீனா கடற்கரை

ரொம்ப நாட்களாகவே எனக்குள் ஒரு ஆசை - மெரீனா கடற்கரை ஓர நடைபாதையில் நடக்க வேண்டும் என்பதே என் ஆசை. 2005-ல் கற்பகம் அவென்யூவிற்கு வந்ததுமுதல் இந்த ஆசை மீண்டும் துளிர்விடத் துவங்கியது. மாலை வேளைகளில் பலமுறை சென்றிருக்கிறேன்; காலை வேளையில்?இன்றுவரை போக இயலவில்லை.

இன்று (30-08-2009) காலை 6-40க்கு பீச்சுக்கு கிளம்பினேன்; 6 மணிக்கே போக வேண்டும் என்ற என் எண்ணம் 40 நிமிஷம் பின்தங்கிவிட்டது. 6-50க்கு உழைப்பாளர் சிலை அருகில் இறங்கி, கண்ணகி சிலை வரை திருப்தியாக நடந்தேன்.

நடைபாதையை பளபளவென்று பண்ணியிருக்கிறார்கள். மனித இனத்தின் “kaleidoscope" என்று சொல்வார்களே, அதை - பலதரப்பட்ட மனிதர்களை அங்கு பார்க்க இயலும். நடக்க முடியாத வயதானவர்கள், காதில் iPod-டுடன் ஓடும் இளைஞர்கள், இளைஞிகள் சிரித்து பேசி விளையாடும் குழந்தைகள், கடல் மணலையே படுக்கையாக உறங்கும் ஏழைகள், கப்பல் போன்ற கார்களில் வரும் பணக்காரர்கள்.

மேலே தகதகவென காலை சூரியன், வங்கக் கடல் வீசும் லேசான கொண்டல் காற்று, சென்னை இன்னும் முழுதாக விழித்துக் கொள்ளாததால் ஆரவாரமற்ற காமராஜர் சாலை - ஓ, மிக ரம்மியமான சூழ்நிலை.

45 நிமிஷங்கள் நடந்தபின்னர், பஸ் பிடித்து வீடு திரும்பினேன் - மிக இனிமையான ஒரு காலைப் பொழுது.

அடுத்தமுறை 5-45 அல்லது 6 மணிக்கே கிளம்ப எண்ணியுள்ளேன்; பீச்சில் சந்திப்போமா?

rajappa
8 PM on 30-8-2009

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை