Skip to main content

ஸ்ரீஆஞ்சனேய ஸ்வாமி பஞ்சவடீ கோயில்


ஸ்ரீஜயமங்கள விஸ்வரூப பஞ்சமுக ஸ்ரீ ஆஞ்சநேயஸ்வாமி திருக்கோயில் புதுச்சேரிக்கு அருகில் (9 கிமீ தூரத்தில்) உள்ளது. இந்தக் கோயிலைப் பற்றி சென்ற 5 நாட்களாக வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் தினமும் சொல்லி வருகிறார். கோயிலையும் காண்பித்து வருகிறார். மிகவும் வசீகரிக்கப்பட்டு, கோயிலைப் பற்றி மேலும் பல விவரங்கள் அறிந்து கொண்டேன்.

1999-ல் கோயில் கட்டுவதற்கான எண்ணம் எழுந்தது. 36 அடி உயரமுள்ள பஞ்சமுக ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியின் சிலை வடிக்க பத்மஸ்ரீ முத்தையா ஸ்தபதி தெரிந்தெடுக்கப்பட்டார். இவர் சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயரின் சிலையை வடித்தவர். இவர் ”40 அடி நீளமுள்ள ஒரே கருங்கல் கிடைக்க வேண்டும்” என்றார். ஹனுமானின் அருளால் கல்லும் கிடைத்தது - அதுவும் புதுச்சேரியின் அருகில் சிறுதாமூர் என்ற இடத்தில். 150 டன் எடையுள்ள கல் சென்னைக்கு அருகிலுள்ள கேளம்பாக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தன்னுடைய ‘ஸ்வர்ணம் சிற்ப கலைக்கூடத்’தில் ஸ்தபதி ஜுன் 1999-ல் சிலையை வடிக்க தொடங்கினார்.

சிற்பம் மிக அழகாக வடிக்கப்பட்டு, புதுச்சேரிக்கு 04 ஜூன் 2003 அன்று எடுத்துச் செல்லப்பட்டது. 150 கிமீ தூரம் வழி முழுதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழுமி ராம நாமத்தை பஜித்து ஆஞ்சநேயரை வழிபட்டனர். மந்திரம் ஜபிக்கப் பட்ட யந்திரம் 11 ஜூன் 2003-ல் பீடத்தின் கீழ் ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளால் நிறுவப்பட்டு, மேலே ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையும் ஸ்தாபிக்கப் பட்டது. 10000க்கும் மேற்பட்ட பக்தர்கள் குழுமி ராம நாமத்தை நாள் முழுதும் ஜெபித்துக் கொண்டே இருந்தனர். மறுநாள் விடியல் அருணோதயம் முதல் ஆஞ்சநேயர் தரிஸனம் கொடுக்க ஆரம்பித்தார்.

36 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலை இங்கு மட்டும் தான் உள்ளது; உலகில் வேறு எங்கும் கிடையாது. இவ்வளவு பெரிய சிலையை வைப்பதற்கு வேண்டிய பெரிய்ய கோயில் கட்டும் பணி தொடங்கி, 31 ஜனவரி 2007-ல் மஹா கும்பாபிஷேகம் ஆயிற்று. மிக அழகான கோயில். இந்த இடத்திற்கு பஞ்சவடீ என்னும் அழகிய பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஆஞ்சநேயருக்கு பஞ்சமுகங்கள் - (1) வானர முகம் (2) நரஸிம்ஹ முகம் (3) கருடன் (4) ஹயக்ரீவர் (5) ----. ஸ்ரீராமச்சந்திர பிரபுவிற்கு தனி சன்னதி. பட்டாபிஷேக கோலத்தில் ஸீதா, லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன், ஹனுமான் ஸகிதம் ஸ்ரீராமர் காக்ஷி அளிக்கிறார்.

ராஜப்பா
22-06-2012
09:15 AM

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை