Skip to main content

சீதாலக்ஷ்மி மன்னி.

எங்கள் சொந்த கிராமம், கவரப்பட்டு என்பது. இது சிதம்பரத்திலிருந்து கிழக்கில் 8 கிமீ  தூரத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம். இங்குதான் என் தாத்தா, அப்பா, அவரது சகோதரர்கள் வசித்தனர். பின்னால், எங்கள் சித்தப்பா மட்டும் இருந்தார். நாராயணஸ்வாமி [ நாணா ] சித்தப்பாவிற்கு இரண்டு ராஜம், ஜெயம் என்கிற இரண்டு புத்திரிகளும், சுந்தரராமன் (சுந்தரம்) என்கிற புத்திரனும்.

சுந்தரம் அண்ணாவின் மனைவி சீதாலக்ஷ்மி. அண்ணா - மன்னிக்கு பாஸ்கர் என்கிற ஒரே புத்திரன்.

இந்த சீதாலக்ஷ்மி மன்னி இந்த வருஷம் 2014 ஃபிப்ரவரி 25-ஆம் தேதி காலை மரணமடைந்தார், வயது 78-80 இருக்கும். 10-ஆம் நாள் காரியத்திற்கு போகலாம் என்று நானும், விஜயாவும் முடிவெடுத்தோம். சாவித்திரியும், மங்களமும் வருவதாக சொன்னார்கள்.

டாக்ஸி ஏற்பாடு செய்துகொண்டு [கிமீ ரூ. 9.00] மார்ச் 5-ஆம் தேதி (புதன்) காலை 11-20க்கு கிளம்பினோம். வழியில் ம்ங்களம், அடுத்து சாவித்திரி என அழைத்துக் கொண்டு, திண்டிவனம், பண்ருட்டி, நெய்வேலி வழியாக சிதம்பரம் சென்றோம். கீழ வீதியில் இருக்கும் குஞ்சிதபாதம் தீக்ஷிதர் வீட்டு மாடியில் தங்கினோம். இரவு தூங்கினோம்.

மறுநாள் மார்ச் 6-ஆம் தேதி காலை 7 மணிக்கு கிளம்பி கவரப்பட்டு சென்றோம். பத்தாம் நாள் காரியங்கள் ந்ல்ல முறையில் சாஸ்திரப்படி, குளத்தங்கரையில் நடைபெற்றது.  குளத்திலேயே குளித்தோம்.

45 பேருக்கும் மேலாக சாப்பிட்டோம். 2-30 மணி சுமாருக்கு கிளம்பி, வழியில் நடேசன் [ என்னுடைய அத்தை மகன், 83 வயசு இருக்கும் ] அவரையும் பார்த்து பேசிவிட்டு, திண்டிவனம் வழியாகவே சென்னை திரும்பினோம்.

கவரப்பட்டு கிராமம், அங்குள்ள பெரிய குளம் மறக்க முடியாதவை.



ராஜப்பா
7-3-2014

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை