Skip to main content

Sundara Kaandam

சுந்தர காண்டம். வால்மீகி ராமாயணம்.

வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் வால்மீகி ராமாயணம் உபன்யாஸத்தை 01-ஏப்ரல்-2012 அன்று ஆரம்பித்தார். வாரம் தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை பொதிகை டீவியில் காலை 06:30 முதல் 06:45 வரை உபன்யாஸம் செய்கிறார்.

பால காண்டம், அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம் ஆக நான்கு காண்டங்களை முடித்து விட்டார். கடைசியாக கிஷ்கிந்தா காண்டத்தை 25-12-2013 அன்று நிறைவு பண்ணினார்.

26-12-2013 வியாழன் முதல் சுந்தர காண்டம் தொடங்கினார். [பகுதி 450] ஸ்ரீ ராமாயணத்தின் மிக முக்கியமான காண்டம் இது. மொத்தம் 68 ஸர்கங்கள் உள்ளன.

ராம தூதனாக ஹனுமான் லங்கா நோக்கிப் புறப்படுகிறார். கடலை கடக்க மேலே பறக்கிறார். இடையில் இருந்த மய்நாகா மலையை இடித்து. த்ள்ளி செல்கிறார். தன் மீது உட்கார்ந்து சிறிது இளைப்பாறி செல்லுமாறு மலை விண்ணப்பிக்கிறது. அன்புடன் அதை மறுத்து, ஹனுமான் மேலே செல்கிறார்.

அடுத்து சுரஸா என்னும் ராக்ஷசியின் வாயில் நுழைந்து அதே வேகத்தில் வெளியே வந்து பறக்க ஆரம்பிக்கிறார். அடுத்து ஸிம்ஹிகா என்னும் ராக்ஷசியையும் முடிக்கிறார். கரையை கடந்து லங்கா நகரை அடைகிறார் (ஸர் 1)

ஹனுமான் லங்கை நகரின் அழகைப் பார்த்து வியக்கிறார். (ஸர் 2)

லங்கா என்னும் ராக்ஷசியை முடிக்கிறார். (ஸர் 3) அந்த இரவில் லங்கையின் அழகை வியந்து கொண்டே வீடு வீடாக ஸீதையை தேடுகிறார் (ஸர் 3 - ஸர் 6)

ஸீதையை தூக்கி வந்த புஷ்பக விமானத்தையும் அங்கு பார்க்கிறார். (ஸர் 7) புஷ்பக விமானத்தின் அழகையும் ஊரின் அழகையும் வியக்கிறார். (ஸர் 8 - 9)

ராவணனின் அரண்மனையை பார்க்கிறார். ராவணனின் பட்டத்து ராணியான மண்டோதரியைப் பார்த்து ஒரு க்ஷணம் ஸீதையோ என சந்தேஹிக்கிறார். (ஸர் 10) அவள் ஸீதை இல்லை என உணர்ந்து, ஸீதையை தேடத் துவங்குகிறார். ஸீதை இறந்திருப்பாளோ எனவும் ஐயம் கொள்கிறார். கடைசியில் அஷோக வனத்திற்கு சென்று அடைகிறார். (ஸர் 11- 13)

அஷோக வனத்தின் அழகைக் கண்டு ஹனுமான் வியக்கிறார் ( ஸர் 14 ) அப்பொழுது அவர்  ஸீதையை அங்கு காண்கிறார். ஸீதையின் நிலையைக் கண்டு அவருக்கு துக்கம் அதிகமாகிறது. (ஸர் 14 - 16)

ஸீதையை சுற்றி பல கோர உருவங்களுடன் நிறைய ராக்ஷசிகள் இருப்பதையும் அவர் பார்க்கிறார். (ஸர் 17 )

ராவணன் தனது ராணிகளுடன் அஷோக வனத்தினுள் நுழைகிறான் ( ஸர் 18)

ராவணன் ஸீதையிடம் தன் சொத்து, பணம், திரவியம், வைரம் ஆகியவற்றை சொல்லுகிறான். (ஸர் 19 - 20)

பொறுமையாக, நிதானம் இழக்காமல், மஹாலக்ஷ்மியின் அவதாரமான ஸீதை, ராவணனுக்கு பல சிறந்த நீதிகளையும் புத்திமதிகளையும் விளக்குகிறாள். (ஸர் 21)

 எதையும் கேட்காத ராவணன் ஸீதைக்கு இன்னும் இரண்டு மாதங்கள் சமயம் தருகிறான், தன்னை மணக்க். ராக்ஷசிகளிடம் அவளுடைய மனசை மாற்றுமாறு சொல்லி விட்டு தன் அரண்மனை நோக்கி திரும்புகிறான். (ஸர் 22)

அங்கிருக்கும் ராக்ஷசிகள் ஸீதையை பயமுறுத்துகிறார்கள். அவர்களின் சுடுசொல் கேட்டு தன் உயிரை மாய்த்துக் கொள்ள ஸீதை எண்ணுகிறாள் (ஸர் 23 - 26)

தன் உயிரை மாய்த்துக் கொள்ள அவள் ஆரம்பிக்கும்போது, இதுவரை நிகழாத நன்நிமித்தங்கள் நிகழ்கின்றன. ஸீதை மகிழ்ச்சி அடைகிறாள். (ஸர் 29)

மேலே உட்கார்ந்திருக்கும் ஹனுமான் குழப்பத்தில் இருக்கிறார் - ஸீதையை தேற்றுவதா இல்லை மௌனமாக இருப்பதா என்ற குழப்பம். கடைசியில் ஸ்ரீராமனின் பெயர்களைக் கூறி அவளை தேற்றுவோம் என முடிவெடுக்கிறார். (ஸர் 30)

ராமனின் பிறப்பு முதல் ராமன் கதையை ஹனுமான் கூற, அதைக் கேட்ட ஸீதா பரவசப்படுகிறாள். (ஸர் 31)

மேலே அமர்ந்த்திருக்கும் ஹனுமானைப் பார்த்து அவள் திகைக்கிறாள். அவர் சொல்லுவதை நம்புவதா வேண்டாமா என புரியவில்லை; ப்ருஹஸ்பதியையும் ப்ரஹ்மாவையும் வணங்கி வேண்டுகிறாள். (ஸர் 32)

மரத்திலிருந்து கீழே இறங்கிய ஹனுமான், “தாங்கள் ஸீதைதானா?” என வினவ, ஸீதையும் தன் பிறப்பு தொட்டு, ஸ்ரீராமனை திருமணம் செய்து கொண்டது, ராவணனால் தூக்கி வரப்பட்டது வரை விவரித்து சொல்கிறாள். (ஸர் 33)

ஸீதைதான் என ஹனுமானுக்கு நம்பிக்கை பிறக்கிறது. ஆனால் ஹனுமானை இன்னும் அவள் பூரணமாக நம்ப முடியவில்லை; ராவணனின் கபட வேஷமோ என எண்ணுகிறாள். ராமனின் குணாதிசியங்களை ஹனுமான் விளக்கி, அவளது ஐயங்களை போக்க ஹனுமான் முயலுகிறார். தான் ராமனின் தூதன் என்றும் ராஜா சுக்ரீவனின் மந்திரி என்றும் சொல்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக ஸீதை தெளிவு பெறுகிறாள். (ஸர் 34)

ராமனின் குணங்களையும், லக்ஷ்மணனின் குணங்களையும் விவரிக்குமாறு ஸீதை கேட்க, ஹனுமானும் விளக்கமாக சொல்கிறார். பின்னர், தன் பிறப்பிலிருந்து ஆரம்பித்து, ராமனின் தூதனாக லங்கா வந்தது வரை ஹனுமான் சொல்கிறார்.  (ஸர் 35)

அடுத்து, ஸ்ரீராமன் பெயர் பொறித்த, அவர் கொடுத்த மோதிரத்தை ஹனுமான் ஸீதையிடம் பக்தியுடன் சமர்ப்பிக்கிறார். ராமனையே நேரில் கண்டாற்போல ஸீதை மகிழ்ச்சி கொள்கிறாள். ராமனைக் குறித்து பலப் பல கேள்விகள் கேட்கிறாள்.  கௌஸல்யா, சுமித்ரா, கைகேயி ஆகிய தாயார்களின் நலம் குறித்து கேட்கிறாள். பரதன், சத்ருக்னன் ஆகியவர்களை குறித்தும் நலம் விசாரிக்கிறாள்.  (ஸர் 36)

இன்னும் இரண்டு மாதங்களுக்குள் ராமன் வந்து தன்னை மீட்க வேண்டும் என சொல்கிறாள். தான் ஸீதையை தூக்கி செல்வதாக கூறிய ஹனுமானுக்கு பல விதமான காரணங்கள் சொல்லி ராமன் தான் வரவேண்டும் என ஸீதை உறுதியாக சொல்லி விடுகிறாள்.  (ஸர் 37)

மோதிரத்திற்குப் பதிலாக ஏதாவது கொடுக்குமாறு ஹனுமான் வேண்டுகிறாள். சித்ரகூடத்தில் தாங்கள் இருந்தபோது ஒரு காக்கையினால் (ராக்ஷசனால்) நிகழ்ந்த சம்பவத்தை ராமனிடம் நினைவுபடுத்துமாறு ஸீதை சொல்கிறாள். பின்னர் தன் நெற்றியில் அணிந்திருந்த சுட்டியை கழற்றி ஹனுமானிடம் கொடுக்கிறாள்.  (ஸர் 38)

கணையாழியை வாங்கிக்கொண்ட ஹனுமான் திரும்பிப் போக தயாராகிறார். ஸீதைக்கு வானர சைன்யத்தின் மீது இன்னும் நம்பிக்கை வரவில்லை [ஸர் 39 ]

ஸீதை ஹனுமானிடம் இன்னும் இரண்டு சம்பவங்களை சொல்கிறாள் - ராமனுக்கும் அவளுக்கும் மட்டுமே தெரிந்த சம்பவங்கள் இவை.  [ ஸர் 40 ]

போவதற்கு முன் ராக்ஷசர்களை அழித்துவிட்டு போக ஹனுமான் நிச்சயிக்கிறார். அங்குள்ள பூந்தோட்டத்தை முதலில் அழிக்கிறார். [ ஸர் 41 ]

ஹனுமான் தோட்டத்தை அழிப்பதை பார்த்த சில ராக்ஷசிகள் ராவணனிடம் சென்று சொல்கிறார்கள்; கோபம் கொண்ட ராவணன் 80,000 கிங்கரர்களை அனுப்புகிறான். அவர்கள் யாவரையும் ஹனுமான் அழிக்கிறார். ஜம்புமாலி என்னும் பலம் பொருந்திய ராக்ஷசனை ராவணன் ஏவுகிறான். [ ஸர் 42 ]

ஜம்புமாலியும் அழிகிறான் [ஸர் 44 ]

ப்ரஹஸ்தா என்னும் ராக்ஷசனின் ஒரு மைந்தனான ஜம்புமாலி அழிந்த பிறகு, ப்ரஹஸ்தாவின் மற்ற ஏழு மைந்தர்களும் தங்களுடைய படைகளுடன் ஹனுமானுடன் போர் புரிகிறார்கள்; கடைசியில் எல்லாரும் அழிகின்றனர். [ ஸர் 45 ]

ராவணன் அடுத்து தன்னுடைய ஐந்து சேனாதிபதிகளை படைகளுடன் அனுப்புகிறான்; அவர்களும் அழிகிறார்கள்.  [ ஸர் 46 ]

அடுத்து, ராவணன் தன்னுடைய சொந்த மகனான அக்ஷா என்பவனை அனுப்ப, அவனையும் ஹனுமான் அழிக்கிறார்.   [ஸர் 47 ]

அடுத்து இந்தர்ஜித் வருகிறான்; பலத்த போர் மூள்கிறது. சண்டையில் ஹனுமானை ஜெயிக்க முடியாது என உணர்ந்த இந்தர்ஜித் கடைசியில் ப்ரஹ்மாஸ்த்திரத்தை ஏவுகிறான். ஹனுமானும் தான் மயக்கமுற்றது போல நடித்து, தன்னை ராக்ஷசர்கள் கட்டிப் போடவும் நடிக்கிறார். கட்டுப்பட்ட ஹனுமானை ராக்ஷசர்கள் ராவணன் முன்பு நிறுத்துகிறார்கள்.  [ ஸர் 48 ]

சிம்மாஸனத்தில் ராவணன் அமர்ந்திருக்க, அவனது நாலு அமைச்சர்களான துர்தரா, ப்ரஹஸ்தா, மஹாபார்ஷ்வா, நிகும்பா நால்வரும் அவனை சுற்றி உட்கார்ந்திருக்கிறார்கள்.  அவனது கர்வமும் அஹம்பாவமும் இல்லாவிட்டால் ராவணன் இந்திரலோகத்தையே ஆண்டிருப்பான், என ஹனுமான் நினைக்கிறார். [ஸர் 49 ]

“நீ யார்’” என மந்திடி ப்ரஹஸ்தா கேட்க, தான் ராமனின் தூதன் என்று சொல்கிறான்.   [ஸர் 50 ]

ஸ்ரீராமனின் முழு கதையையும் ஹனுமான் விவரிக்கிறான். ஸீதையை யாரோ தூக்கி சென்றது வரை ஹனுமான் சொல்கிறான். வாலியை கொன்றது, சுக்ரீவன் ராஜாவை நட்பு கொண்டது, ஸீதையை தேடி வானர சைன்யங்களை அனுப்பியது வரை சொல்லி விட்டு, ராவணன் உயிர் பிழைக்க வேண்டும் என்றால் ஸீதையை ராமனிடம் திரும்பக் கொடுத்து ராமனோடு நட்பு கொள்ள ஹனுமான் சொல்கிறார்.   [ ஸர் 51 ]

கோபமுற்ற ராவணன் ஹனுமானை கொல்ல ஆணையிகிறான். ஆனால் விபீஷணன், “தூதனைக் கொல்லக் கூடாது” என தன் அண்ணன் ராவணனுக்கு அறிவுரை கூறுகிறான்.  [ ஸர் 52 ]

ஹனுமானின் வாலில் பல துணிகளை சுற்றி, அதில் நிறைய எண்ணெய் ஊற்றி, நெருப்பு மூட்டி வாலை எரிக்கிறார்கள். ஹனுமானின் கை கால்களைக் கட்டி. லங்கா ஊர் முழுதும் சுற்றி இழுத்துப் போகிறார்கள்; அவன் ஒரு ஒற்றன் என பறை சொல்கிறார்கள். இதையெல்லாம் கேட்ட ஸீதை மிகவும் வேதனைப் பட்டு, ஹனுமானுக்கு தீங்கு எதுவும் நேரக்கூடாது என  அக்நி பகவானிடம் வேண்டுகிறாள்.   அக்நியும் அவ்வாறே செய்கிறார். லங்காவின் கோட்டை மதிலை அடைந்த ஹனுமான், ஒரு இரும்புத் தூணை பிடுங்கி அங்குள்ள ராக்ஷசர்களை அழிக்கிறார்.  [ஸர் 53 ]

பின்னர்  லங்கை நகரையே தீயினால் அழிக்கிறார்.  [ஸர் 54 ]

தான் மூட்டிய தீயில் ஸீதாவும் அழிந்திருப்பாளோ என ஹனுமான் அஞ்சுகிறார். பல நல்நிமித்தங்களைப் பார்த்து அவர் மனம் சாந்தியடைகிறார். (ஸர் 55)

அஷோக வனத்திற்கே மீண்டும் சென்று ஸீதை உயிருடன் இருப்பதை பார்க்கிறார். கவலைப்படாமல் இருக்குமாறும், ராமர் சைன்யங்களோடு வந்து ராவணனை வதம் செய்து ஸீதையை மீட்டுச் செல்வார் எனவும் நம்பிக்கையூட்டுகிறார். பின்னர் அரிஷ்டா மலையின் மீது ஏறி கடலை கடக்க தயாராகிறார். (ஸர் 56)

ஹனுமான் லங்கையை தாண்டி மேய்னகா மலையைத் தொட்டு மஹேந்திர மலையை அடைகிறார். அவரது ஆரவாரக் கூச்சலைக் கேட்ட வானரங்கள் ஹனுமான் திரும்பி விட்டதையும் அவர் போன காரியம் ஜெயமானதையும் அறிந்து, சந்தோஷத்தில் ஆரவாரம் செய்கின்றனர். ஹனுமான் ஜாம்பவானையும் அங்கதனையும் வணங்குகிறார். ஜாம்பவானும் அங்கதனும் மகிழ்ச்சியில் மூழ்குகிறார்கள் . (ஸர் 57)

எல்லாவற்றையும் விவரமாக கூறுமாறு ஜாம்பவான் கேட்க, ஹனுமானும் விவரித்து விளக்குகிறார். (ஸர் 58)

ஸீதையை பார்த்ததையும் அவர் விளக்கி சொல்கிறார் (ஸர் 59)

ஸீதையை தாங்களே மீட்டு வந்து விடலாம், ராவணனை தாங்களே போரிட்டு அழித்து விடலாம் எனவும் அங்கதன் சொல்ல, அது உகந்ததல்ல என ஜாம்பவான் மறுக்கிறார்.  (ஸர் 60)

மஹேந்திர மலையை விட்டு கிஷ்கிந்தா நோக்கி எல்லாரும் புறப்படுகின்றனர். வழியில் மதுவனம் என்ற தோட்டத்தை பார்த்து அதில் உள்ள தேனை குடிக்க முற்படுகின்றனர். சுக்ரீவ மஹாராஜாவிற்கு மிகவும் ப்டித்தமான இந்த தோட்டத்தை ததிமுகா என்னும் வானரம் காத்துக் கொண்டிருக்கிறது. அது இவர்களை தடுக்க முற்பட, வானரங்கள் அதை நகங்களாலும், பற்களாலும் கடிக்கின்றன.  (ஸர் 61)

தேனைக் குடித்து வானரங்கள் மகிழ்ச்சியில் கூத்தாடுகின்றன.  (ஸர் 62)

ததிமுகா சுக்ரீவனிடம் சென்று முறையிகிறான். பக்கத்தில் இருந்த லக்ஷ்மணன் விஷயம் என்னவென்று கேட்கிறார். வானரங்கள் ஆரவாரம் செய்வது “ஹனுமான் திரும்பி விட்டதையும், அவர் சென்ற காரியம் வெற்றி பெற்றுள்ளது என்பதையும், ஹனுமான் ஸீதையை பார்த்து விட்டார்,” என்பதையும் யூகித்த லக்ஷ்மணன், சுக்ரீவன் மூலமாக ததிமுகனை விரைவாக சென்று ஜாம்பவான், அங்கதன், ஹனுமான் ஆகியோரை கூட்டி வருமாறு சொல்கிறார். (ஸர் 63)

திரும்பிய ததிமுகன் ஜாம்பவான், அங்கதன், ஹனுமான் ஆகியோரிடம் மன்னிப்பு வேண்டுகிரான். அவர்களை சுக்ரீவனிடம் விரைந்து செல்லுமாறு சொல்கிறான். யாவரும் மகிழ்ச்சி கூச்சலோடு புறப்படுகின்றனர். இதற்கிடையே, சுக்ரீவன் ராமனிடம் விவரமாக விளக்கிச் சொல்கிறார்.  (ஸர் 64)

ப்ரஸ்ராவனா என்னும் மலையில் இருந்த ராமன், லக்ஷ்மணன், சுக்ரீவனிடம் வானரங்கள் மகிழ்ச்சியோடு ஸீதையைப் பார்த்த விஷயத்தை சொல்லுகிறார்கள். ஹனுமானிடமே விவரங்களைக் கேட்டு ராமர் தெரிந்து கொள்கிறார். ஸீதை கொடுத்தனுப்பிய தலை சூடாமணியையும் ராமரிடம் சமர்ப்பிக்கிறார். ஸீதை சொன்ன செய்தியையும் ராமருக்கு தெரிவிக்கிறார்.  (ஸர் 65)

ஸீதை அனுப்பிய ஆபரணத்தை மார்போடு அணைத்துக் கொள்கிறார். ஸீதை இன்னும் என்ன சொன்னாள் எனவும் கேட்கிறார்.  (ஸர் 66)

ஸீதை கூறிய காக்கை சம்பவத்தை ஹனுமான் ராமனிடம் சொல்கிறார்; சீக்கிரமே வந்து தன்னை மீட்க வேண்டும் என்று சொன்னதையும் ஹனுமான் சொல்கிறார்.   (ஸர் 67)

பெரிய கடலை எப்படி வானரங்கள் கடப்பார்கள் என ஸீதை சந்தேகப்பட்டாள் என்பதையும் ஹனுமான் சொல்கிறார்.   (ஸர் 68)

இத்துடன் சுந்தர காண்டம் நிறைவு பெறுகிறது.


வேளுக்குடி இதை  17-04-2014  வியாழன் அன்று நிறைவு செய்தார்.

இது 530-வது உபன்யாஸம்


ராஜப்பா
17-04-2014

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை