Skip to main content

தங்கத்தேர் இழுத்தோம் - 2011

இன்று (14-01-2011) வெள்ளிக்கிழமை மாலை ஸ்ரீ மருந்தீஸ்வரர் கோயிலில் நாங்கள் தங்கத்தேர் இழுத்தோம். இது அருண்-காயத்ரியின் வேண்டுதல். 6-45க்கு நான், விஜயா, கிருத்திகா, அதிதி, சதீஷ் ஆகியோர் காரில் கோயிலுக்கு. கிளம்பினோம். மருந்தீஸ்வரர் - திரிபுரசுந்தரி அம்மன் கோயில் பழமையான கோயில்.
அங்கு, அருண், காயத்ரி, ஸௌம்யா, ஸ்ரீராம் ஆகியோரும், பாலு மாமா, மாமி, ரமணா, அர்ச்சனா, அவர்கள் குழந்தை, மீனாவின் குழந்தை, அவள் மாமனார், மாமியார் (மீனா வரவில்லை), காயத்ரியின் இரண்டு சித்தப்பாக்கள், கணேஷ், சுகவனம், சுதா, சந்தர், தனுஷ், தர்ஷிணி, சந்தரின் அம்மா, சரோஜா, ராஜி மாமி, கிரிஜா மாமி (இவர்கள் இருவரும் சரோஜாவின் அபார்ட்மெண்டில் வசிப்பவர்கள்) ஆகியோர் வந்தனர்.

7-30 மணிக்கு தேர் ஆயத்தமானது. சுக்கிரவார அம்மனை தேரில் ஏற்றி கற்பூர தீபாராதனைக்கு பின் தேர் இழுத்தல் துவங்கியது. மொத்தம் 4 உபயதாரர்கள். ஒவ்வொருவரும் 1/4 சுற்று இழுக்கவேண்டும்; அருண் இரண்டாவதாக இழுத்தான்; நாங்களும் சேர்ந்து கொண்டோம்.


இழுத்து முடிந்து, அர்ச்சனை, தீபாராதனைக்கு பின்னர் கேஸரி பிரஸாதம் வழங்கப்பட்டது. அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்ட பின்னர் எல்லாரும் வீடு திரும்பினோம்.

முன்னதாக 2003 மே மாதம் சாவித்திரி தன் 60-வயது பூர்த்திக்காக வடபழனி கோயிலில் தேர் இழுத்தாள்; அடுத்து 27 மார்ச் 2009-ல் அருண் காயத்ரி வடபழனி கோயிலில் தேர் இழுத்தார்கள். விவரம் இங்கு படிக்கலாம்.

ராஜப்பா
14-01-2011
இரவு 9 மணி

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை