Skip to main content

ஸ்ரீ வரலக்ஷ்மி பூஜை

ஸ்ரீ வரலக்ஷ்மி பூஜை.

இன்று ஆகஸ்ட் 24-ஆம் தேதி வெள்ளிக்கிழமை - ஸ்ரீ வரலக்ஷ்மி பூஜை. எல்லார் வீடுகளிலும் நடந்தது போலவே எங்கள் வீட்டிலும் பூஜை சிறப்பாக நடந்தது.
















நேற்று மாலை மயிலாப்பூர் (வேறு எங்கு, தெற்கு மாட வீதிக்குத்தான் !) சென்று பழங்கள், புஷ்பங்கள் (விலையை மட்டும் கேட்டு விடாதீர்கள் - தாழம்பூ 50 ரூ !!) வாங்கி வந்தோம். அம்மனை அலங்கரித்து மற்ற ஏற்பாடுகளையும் விஜயா , காயத்ரி இருவரும் செய்தனர். அவர்களுக்கு கூடமாட ஒத்தாசையாக இரண்டு குட்டிகளும் இருந்தார்கள் (ஒத்தாசையாக .. ??)
இன்று விடியற்காலை சீக்கிரமே எழுந்து, ஸ்நானம் முடித்து, பூஜைக்கான ஏற்பாடுகள், இட்லி வடை, பாயசம், இரண்டு வித கொழுக்கட்டைகள் இன்ன பிற செய்து, பூஜையை ஆரம்பிக்கும் போது மணி 9-30. நான் மந்திரம் சொல்ல, விஜயாவும் காயத்ரியும் பூஜை செய்தனர். பிரதக்ஷிண நமஸ்காரம் செய்து பூஜை முடியும்போது 10-45 ஆகி விட்டது.

வீட்டிலே பூ, பழம், போன்று நெறய்ய சாமான்கள் இருந்தது, ரெண்டு குட்டிகளுக்கும் ஒரே குஷி. எல்லாவற்றையும் வாரி கொட்டி, சந்தன கிண்ணத்தில் குங்குமத்தை கொட்டி, ஆப்பிள்களை DUKES பந்துகளாக நினைத்து பௌன்சர்கள் போட்டு --- ஒ, ஒரே ரகளைதான். சமையல் அறையில் தங்களுக்கு எட்டிய உயரத்தில் இருந்த அத்தனை பாட்டில்கள், பாத்திரங்களையும் தூக்க முடியாமல் தூக்கி வந்து, மந்திரம் சொல்லிக் கொண்டிருந்த என் பக்கத்தில் "தாத்தா, தாத்தா" என்று கூப்பிட்டு கடை பரப்பியது கண்கொள்ளா காட்சி !



ஸ்ரீ வரலக்ஷ்மி பூஜை பண்ணியதற்கு நாங்கள் யாவரும் பெரியவர்களுக்கு நமஸ்காரங்கள் செய்கிறோம்.















ராஜப்பா.

12.00 மணி,

24 ஆகஸ்ட் 2007

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை