Skip to main content

ஒரு மொபைல் ஃபோனின் கதை.

ஒரு மொபைல் ஃபோனின் கதை.


நேற்று எங்கள் வீட்டில் ஒரு மொபைல் ஃபோன் "தொலைந்து" போய் விட்டது.. கைமறதியாக எங்கேயோ வைத்து விட்டொம் - எங்கு வைத்தோம் என்பது தெரியவில்லை.

ஃபோனில் சார்ஜ் இல்லாததால், ரிங் போட்டு இடத்தை கண்டு பிடிக்கவும் முடியவில்லை. கடைசியாக ஃபோன் யார் கையில் இருந்தது என்று யோசித்ததில், குழந்தை அதிதி வைத்திருந்தாள் என்பது ஞாபகம் வந்தது.

ஆரம்பித்தது வீட்டையே புரட்டிப் போட்டு தேடும் படலம். கட்டில்களின் கீழே, கதவுகளின் பின்னால், துணி மூட்டைக்குள் - என்று வீட்டின் எல்லா இடங்களையும் அலசினோம். ஆறு மாதங்களாக் தேடிக் கொண்டிருந்த பல பொருட்கள், அதிதியின் பல விளையாட்டு சாமான்கள், இன்னும் பலப்பல "எப்போதோ தொலைந்து போன" சாமான்கள் புதையலாக கிடைத்தனவே ஒழிய, போன் கிடைத்தபாடில்லை.

கறிகாய், பழம் வைக்கும் கூடை, ஃப்ரிஜ்ஜின் உள்ளே, மர பீரோ, ஸ்டீல் பீரோ, டேபிள் டிராயர்கள், சமையல் பாத்திரங்கள் - லிஸ்ட் நீண்டு கொண்டு போனதே தவிர, போன் ??


அதிதியின் விளையாட்டு சாமான்கள், பொம்மைகள் இன்ன பிற சாமான்களை வைப்பதற்கு எங்கள் வீட்டில் நாலு அட்டைப்பெட்டிகள், கூடைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ரொம்பி வழியும். விடவில்லை. தேடினோம்.


மூன்றாவது பெட்டியின் அடியில் ----- அப்பாடா, ஃபோன் கிடைத்தது. ஒரு வழியாக.


ஃபோனை அதிதியிடம் காண்பித்தால், குழந்தை 1000-வாட் புன்னகை புரிகிறாள் !!!


ராஜப்பா

காலை 1150, 8 ஆகஸ்ட்

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை