Skip to main content

இன்றைய நாட்குறிப்பு

என்னுடைய இன்றைய 15-11-2008 டைரிக் குறிப்பிலிருந்து ..

காலை 04-45 க்கு வழக்கம் போல எழுந்து, குளித்து, ஸ்வாமிக்கு விளக்கேற்றி, ஸ்லோகங்கள் சொன்னேன். பின்னர் விஷ்ணு சஹஸ்ர நாமம், திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை, கீதையிலிருந்து 8 - 10 ஸ்லோகங்கள் பாராயணம்.

7 மணிக்கு அருகிலுள்ள் MRC Nagar (1 1/2 கிமீ) வரை நடை. திரும்பும் வழியில் ஸ்ரீ ஐயப்பன் கோயில் - பதினெட்டு படி ஏறி, ஐயப்பன் தரிசனம். பக்தர்கள் நிறைய பேர் இருந்தனர். சுடச்சுட வெண்பொங்கலும், சர்க்கரைப் பொங்கலும் ப்ரஸாதமாக கிடைத்தது.

8 லிருந்து 8-45 வரை மூன்று ந்யூஸ் பேப்பர்கள். 9 மணிக்கு பூரி-கிழங்கு காலை சிற்றுண்டி. பின்னர், கடைக்குப் போய் முளைக்கீரை வாங்கிவந்தேன்.

9-30 முதல் 10-15 வ்ரை வெஜிடபிள் ஸூப்புக்கான தயாரிப்பு ஆரம்பம். பின்னர் கொஞ்ச நேரம் கம்ப்யூட்டரில் யாஹூ பார்த்தல். MIP குறித்து ஒரு மெயில் அனுப்பினேன்.

11-15க்கு ஸூப் பண்ண ஆரம்பித்தேன்; 11-45க்கு குடித்தோம் - நன்றாக வந்திருந்தது. (ஸூப் செய்முறை இங்கே படிக்கலாம்)

12-15க்கு (ஆர்டர் செய்திருந்த புதிய) இரண்டு இலவம்பஞ்சு மெத்தைகள் வந்தன - இரண்டும் ரூ. 4100.00 ஆயிற்று.

மதியம் 1-30 க்கு லஞ்ச் -முருங்கைக்காய் பொரித்த குழம்பு, சேனைக்கிழங்கு கறி, தக்காளி ரசம். பின்னர் 4-15 வரை தூக்கம். வீட்டிலிருந்து 2 கிமீ தூரத்திலுள்ள, ஸ்ரீஸித்தி புத்தி சமேத கற்பக விநாயகர் கோயிலுக்கு நானும் விஜயாவும் மாலை 5 மணிக்கு நடந்து சென்றோம். விநாயகரைத் தவிர, ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசந்திரமௌளீஸ்வரரும், நந்திகேஸ்வரரும் இங்கு எழுந்தருளியிருக்கிறார்கள். நவக்கிரகத்தையும் 9 முறை சுற்றி விட்டு, 7 மணிக்கு நடந்து வீடு திரும்பினோம்.

8-30 மணி முதல் 10-30 வரை டிவி - Man U vs Stoke City EPL football match - பார்த்தேன். Man U 5 - 0 கோல் கணக்கில் ஜெயித்தது.

ராஜப்பா

15-11-2008 இரவு 10-40 மணி

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை