Skip to main content

Vaithisvaran Koil 01-02-2009 Sriram Mottai

SRIRAM 01-Feb-2009 Vaitheeswaran Koil

அருணின் குழந்தை ஸ்ரீராம் (7-4-2008) தற்போது 10 மாசமாகப் போகிறது.

அவனுக்கு முடி இறக்க ஃபிப்ரவரி 1-ஆம் தேதி நாள் பார்த்து, வேன் ஏற்பாடு பண்ணி, ரூம் ஏற்பாடு பண்ணி தயாராக இருந்தோம். முதலில், ரூம் எதுவும் கிடைக்காமல் கொஞ்சம் பதட்டமாக இருந்தபோதிலும், பின்னர் இடம் கிடைத்தது. நாங்கள் 8 பேரும் + 3 குழந்தைகளும் சேர்ந்து போவதாக திட்டம்.
கடைசி நிமிஷத்தில் அஷோக்கிற்கு காலில் அடிபட்ட காரணத்தினால், அவனும் நீரஜாவும் வர முடியவில்லை. கிருத்திகா-அர்விந்த் ஆகியோராலும் வர இயலவில்லை. எனவே, நான், விஜயா, அருண், காயத்ரி, ஸௌம்யா, ஸ்ரீராம் ஆகிய 6 பேர் மட்டுமே கிளம்பினோம். அருண் தன் காரில், டிரைவர் (ரூ. 500/- ஒரு நாளைக்கு) ஏற்பாடு பண்ணிக்கொண்டு கிளம்பினோம்.
சனிக்கிழமை 31-01-2009 காலை 11-15க்கு சென்னையில் எங்கள் வீட்டிலிருந்து கிளம்பி, மரக்காணத்தில் 1/2 மணி நேரம் தங்கிவிட்டு, பின்னர் கடலூர் சென்றோம். அங்கு லேசாக டிஃபன் சாப்பிட்டுவிட்டு, குமார் வீட்டிற்கு (பாபுராவ் தெருவில்) சென்றோம். சுமார் 15 - 20 வருஷங்களுக்குப் பிறகு பாபுராவ் தெருவிற்குச் செல்கிறோம். மாற்றமும் அதிகமில்லை, முன்னேற்றமும் இல்லை.


பிடாரி அம்மன், ப்ரஹந்நாயகி அம்மன், ஸ்ரீபாடலீஸ்வரர் கோயில்களுக்கு சென்று அம்மன், ஸ்வாமியை தரிசித்தோம். மாலை 6-15க்கு கிளம்பி, வைத்தீஸ்வரன் கோயிலுக்கு விஸ்வா லாட்ஜுக்கு சென்றடையும்போது, இரவு 8-15. ஒரு ரூமிலேயே 6 பேரும் இருக்கவேண்டிய கட்டாயம். சாப்பிட்டுவிட்டு, ரூமில் படுத்துத் தூங்கினோம். இந்த லாட்ஜ் குளத்திற்கு மிகமிக அருகில் உள்ளது.








01-Feb-2009 காலையில் ரமணா (காயத்ரியின் தம்பி) பெங்களூரிலிருந்து வந்தான். குழந்தைக்கு காலை 8 மணிக்கு முடியிறக்கினோம் (மாமா மடியில் உட்கார வைத்து). கொஞ்சம் அழுதான். ரூமிற்கு வந்து, குளித்துவிட்டு, ஸ்ரீராமிற்கும், ஸௌம்யாவிற்கும் புது டிரெஸ் போட்டு (விஜயாவும், காயத்ரியும் 9-கஜம் புடவையில்) கோயிலுக்குச் சென்றோம். They performed Maavilakku Maavu at the Amman Sannidhi












கோயிலில் எக்கச்சக்கமான கூட்டம் - 35 கல்யாணம், 55 காது குத்து விழா கோயிலில் நடந்துகொண்டிருந்தன. ஊரிலும் ஒரே கல்யாணக் கும்பல்தான்; எங்களுக்கு காலை டிஃபனே கிடைக்கவில்லை. விஜயாவும் காயத்ரியும் மாவிளக்கு போட்டனர். 5 ஸ்வாமி/அம்மனுக்கு அர்ச்சனை பண்ணியபிறகு ரூம் திரும்பினோம். என்ன கூட்டம் ! குளத்தில் நீர் நிரம்பியிருந்தது; கொஞ்சம் சுத்தமாகவே காணப்பட்டது. ஸௌம்யா படிக்கட்டில் உட்கார்ந்து தண்ணீரை பார்த்துக் கொண்டேயிருந்தாள்; வரவே அவளுக்கு மனசில்லை



சதாபிஷேகம் என்னும் ஹோட்டலில் சாப்பிட்டோம். 2-15 மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலை (ஊரை) விட்டு புறப்பட்டு, கடலூரில் ஜூஸ் குடித்தபின், நேராக சென்னையில் வந்து இறங்கும்போது இரவு மணி 8. ஸ்ரீராமிற்கு ஆரத்தி எடுத்து, வீட்டினுள் நுழைந்தோம்.

கிருத்திகா சமைத்து வைத்திருந்தாள். சாப்பிட்ட பின்னர் அருண் ஆகியோர் திருவான்மியூர் போனார்கள்.இவ்வாறாக, ஸ்ரீராம் முடி இறக்குதல் இனிதே நடைபெற்றது.

குழந்தையின் ஆயுஷ்ய ஹோமம் பங்குனி 15, (மார்ச் 28) சனிக்கிழமை அடையாறு NKS Hallல் நடைபெற உள்ளது. எல்லாரும் வந்திருந்து குழந்தையை ஆசீர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


ராஜப்பா
மாலை 4-10 மணி, 03-02-2009

IMPORTANT PHONE NUMBERS

DURAI GURUKKAL : 04364 - 279220,  94435 64347
THAILA LODGE : 99448 86682 (Mr ANAND)
BALAMBIKA LODGE: 94435 64604 (Mr RAMESH)
VISWA LODGE : 94444 32665

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை