Skip to main content

தங்கத் தேர் Golden Chariot

தங்கத் தேர் Golden Chariot
காயத்ரிக்காக அவள் பெற்றோர் வடபழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் இழுப்பதாக வேண்டிக் கொண்டிருந்தனர். சென்ற மார்ச் மாசம் 27 ஆம் தேதியன்று நாள் குறிக்கப்பட்டு, அதற்கான பணமும் (ரூ. 1000/-) செலுத்தப்பட்டது.

நான், விஜயா, சதீஷ் ஆகிய மூவரும் அன்று பகல் 4.00 மணிக்கு அருண் வீட்டிற்குப் போனோம். அடுத்த அரைமணிக்குள் குழந்தை அதிதி அங்கு வந்தாள் (அவளை விட்டுவிட்டு க்ருத்திகா வெளி வேலையாக போய்விட்டாள்).

5 பெரியவர்கள், 3 குழந்தைகள் ஆகியோர் அருண் காரில் கிளம்பி, 6 மணி சுமாருக்கு வடபழனி முருகன் கோயிலுக்கு சென்றோம். அங்கு ஏற்கனவே காயத்ரியின் பெற்றோர் மற்றும் உறவினர் வந்திருந்தனர்.




7 மணிக்கு தேர் தயாராகி, கற்பூர தீபாராதனை ஆயிற்று. தேர் இழுக்க நாங்கள்தான் முதல் குடும்பம். எல்லாரும் சேர்ந்து தேர் இழுத்தோம். ஒரு சுற்று இழுத்தோம். மண்டபத்தில் உட்கார்ந்து, புளியோதரை, சக்கரைப்பொங்கல் பிரசாதம் சாப்பிட்ட பிறகு, அவரவர்கள் வீடு திரும்பினோம். வடபழனியில் கார் நிறுத்திய இடத்திலேயே குழந்தைகள் ஸௌம்யா, அதிதி, ஸ்ரீராம் மூவரும் சாப்பிட்டனர்.
தேர் இழுத்தது ஒரு சுக அனுபவம்.
முன்னதாக 2003 மே மாசம் சாவித்திரி தனக்கு 60-வயது நிரம்பியது குறித்து இதே கோயிலில் தங்கத் தேர் இழுத்தாள். அன்றையத் தேதியில் சென்னையில் இருந்த ”க.ரா.சு” குடும்பத்தினர் யாவரும் (கி.வே.சு, கிரிஜா உள்பட) காலையிலேயே ஜெயராமன் வீட்டிற்குப் போய் சாவித்திரியை வாழ்த்தினோம்/வணங்கினோம். சரவணாபவன் ஹோட்டலிலிருந்து சாப்பாடு வரவழைத்து ஜெயராமன் வீட்டிலேயே சாப்பிட்டோம். பின்னர் மாலையில் கோயிலுக்குச் சென்று, முருகனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து தங்கத் தேர் இழுத்தோம். தற்சமயம் என்னிடம் டிஜிடல் போட்டோக்கள் இல்லை. யாரிடமாவது இருந்தால் எனக்கு அனுப்பி உதவவும்.

ராஜப்பா
12:15 on 31 March

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை