Skip to main content

Srimad Bhagavatham ஸ்ரீமத் பாகவதம் - வேளுக்குடி கிருஷ்ணன்

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் இன்று (9-11-2009, திங்கட்கிழமை) காலை பொதிகை டீவியில் “கண்ணனின் கதையமுதம்” என்ற தலைப்பில் ஸ்ரீமத் பாகவதம் உபன்யாஸம் துவங்கினார். காலை 6-30க்கு. இது கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கும் என அவர் குறிப்பிட்டார்.

வேதத்தை விளக்க ஸ்ரீராமாயணம், மஹாபாரதம் என்னும் இரண்டு இதிஹாசங்களும், பதினெட்டு புராணங்களும் உள்ளன. புராணம் என்றால் காலத்தால் பழமையாக இருந்தாலும் கருத்தால் எப்பொழுதும் புதிதாக இருக்கும்.புரா + அபி + நவம். கதை நடந்த காலத்திற்கு மிக பின்னால் எழுதப்பட்டவை புராணங்கள். ஆனால், இதிஹாசங்கள் கதை நடந்தபோதே எழுதப்பட்டவை.

ஸ்ரீமத் பாகவத புராணத்தை வ்யாசர் எழுதினார். மஹாவிஷ்ணுவின் 10 அவதாரங்களையும் அவற்றில் வரும் பல கதைகளையும் அடக்கியது.   ஸ்ரீ சுகாசார்யர் இதை பரீக்ஷித் மஹாராஜாவிற்கு ஏழு நாட்களில் உபதேசித்தார். ப்ரஹ்மாவின் குமாரர் வசிஷ்டர் -- சக்தி -- பராசரர் -- வ்யாஸர் -- ஸ்ரீ சுகர் இது வசிஷ்டரின் வம்ஸாவளி.

மொத்தம் 12 ஸ்கந்தங்கள் (அத்தியாயங்கள்). பிறப்பின் மூலத்தை முதல் ஸ்கந்தத்தில் ஆரம்பித்து, பிரளயம், கலிகாலத்துடன் 12ம் ஸ்கந்தம் முடிவுறுகிறது. இடையில் தசாவதாரங்கள் குறித்து விவரமான விளக்கம்.

ராஜப்பா
10:50 மணி
9-11-2009

Comments

THANGAMANI said…
பயனுள்ள தகவல்.நன்றி.வாழ்க வளமுடன்..

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை