Skip to main content

மயிலாப்பூர் இன்று.

இன்று (27-09-2010) மாலை மயிலாப்பூர் சென்றோம். அடுத்த பத்து நாட்களில் (அக் 8 ஆம் தேதி முதல்) நவராத்திரி பண்டிகை வர இருப்பதால், மயிலாப்பூர் இப்போதே களை கட்டி விட்டது.

காதி கிராமோத்யோக் கடையிலும், வடக்கு மாட வீதி முழுதும் பொம்மைகள் குவிந்துள்ளன. எவ்வளவு பொம்மைக் கடைகள் ! அம்மாடியோவ். அழகு, அழகான பொம்மைகள். விலையைக் கேட்கவில்லை - மயக்கம் போட்டு விடுவேனோ என்ற பயம்தான்.

வடக்கு மாட வீதியில் உள்ள விஜயா பூஜைப் பொருட்கள் கடை என்னமாக ஜொலிக்கிறது! நவராத்ரிக்கு வேண்டிய சாமான்கள் கொட்டிக் குவிந்துள்ளன, வண்ண வண்ணமாக. அடுத்த வாரத்தில் கடையினுள் நுழைவதே கஷ்டமாக இருக்கும். கடை பெரிதாக்கப் பட்டுள்ளது. 2 - 3 வருஷங்களுக்கு முன்னால், இந்தக் கடை இவ்வளவு பெரியதாக இல்லை.

சுக்ரா ஜுவல்லரியிலும் புதுப் புது வெள்ளி சாமான்கள் நவராத்திரி ஸ்பெஷல் குவிக்கப்பட்டுள்ளன.

வழக்கம்போல கறிகாய்கள் நிறைய்ய இருந்தன. காலிஃப்ளவர், வெண்டைக்காய், கொத்தமல்லி வண்டி வண்டியாக இருந்தன. பழங்களும் இவ்வாறே - கொய்யா, வாழை, ஆப்பிள், திராக்ஷை, மற்றும் ஆச்சரியகரமாக ஸீதாப் பழங்கள் குவிந்திருந்தன. தேங்காய், புஷ்பங்களைப் பற்றி எழுதவே வேண்டாம்.

ஸ்ரீ கற்பகாம்பாள் ஸமேத ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலும் நவராத்திரிக்கு தயாராகி விட்டது. அக் 8 முதல் ஸ்ரீ கற்பகாம்பாளுக்கு தினம்தோறும் விதவிதமான அலங்காரங்கள். காண கண் கோடி வேண்டும்.

மயிலாப்பூர், மயிலாப்பூர்தான் ...

ராஜப்பா
27-09-2010
இரவு 8-30 மணி

Comments

Silvandu said…
உங்கள் வலைப்பதிவு மிகவும் அருமை. பாராட்டுக்கள். மேலும் நிறைய எழுத வாழ்த்துக்கள்

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை