Skip to main content

ஸ்ரீமத் பாகவதம் - 7வது ஸ்கந்தம் (ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன்)

ஸ்ரீவேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் ஸ்ரீமத் பாகவதத்தின் ஆறாவது ஸ்கந்தத்தை அக்டோபர் 15-ஆம் தேதியன்று ஆரம்பித்தார். (இங்கு படிக்க) நேற்று (நவம்பர் 17-ஆம் தேதி இந்த 6-வது ஸ்கந்தம் நிறைவு பெற்றது.

இன்று (18-11-2010) காலை அவர் 7-வது ஸ்கந்தத்தை ஆரம்பித்தார். 269-வது நாள்.

ஸ்கந்தம் 3-ல் பகவான் வராஹப் பெருமாளாக அவதரித்து ஹிரண்யாக்ஷனை சம்ஹாரம் செய்து பூமாதேவியைக் காப்பாற்றினார். இந்த ஹிரண்யாக்ஷனின் அண்ணா ஹிரண்யகசிபு பிரமனைக் குறித்து கடுந்தவம் புரிந்து, “சாகா வரம்” பெற்றான். வரம் பெற்றவுடன், மிகக் கொடூரமாக எல்லாரையும் கொன்று குவிக்க ஆரம்பித்தான்.

பகவான் நரசிம்ஹ அவதாரம் எடுத்து இவனை எப்படி சம்ஹாரம் செய்தார், இவனுடைய மகனான ப்ரஹ்லாதனின் அத்யந்த பக்திக்கு ஆட்பட்டு, குழந்தை அழைத்தவுடன் எப்படி தூணிலிருந்து தோன்றி ராக்ஷசனை கொன்றார் என்பது 7-வது ஸ்கந்தத்தில் விவரிக்கப் படுகிறது.

கேட்தல், பாடுதல், சிந்தித்தல், திருவடிகளுக்கு தொண்டு புரிதல், அர்ச்சித்தல், வணங்குதல், அடிமை செய்தல், நட்போடு இருத்தல், ஆத்மாவை ஸமர்ப்பித்தல் - என்ற ஒன்பது விதமான பக்தியை ப்ரஹ்லாதன் உபதேசம் பண்ணுவதும் இந்த ஸ்கந்தத்தில் விளக்கப்படுகிறது.

ஷ்ரவணம் - பகவானின் புண்ய கதைகளையும் புகழையும் கேட்தல்.
கீர்த்தனம் - அவனது திவ்ய நாமங்களை பாடுதல்
ஸ்மரணம் - அவனது புகழையும், நாமங்களையும் எப்போதும் சிந்தித்தல்.
பாத ஸேவனம் - அவனது திருவடிகளுக்கு தொண்டு புரிதல்.
அர்ச்சனம் - பகவானுடைய திரு உருவங்களுக்கு நாமங்களைச் சொல்லி அர்ச்சித்தல்.
வந்தனம் - அவனது பாதார விந்தங்களில் விழுந்து வணங்குதல்.
தாஸ்யம் - அவனுக்கே அடிமை செய்தல்.
ஸாக்யம் - பகவானுக்கு பரம நண்பனாக இருத்தல்.
ஆத்ம நிவேதனம் - பகவானுக்கு தன்னை முழுமையாக ஸமர்ப்பித்தல்.

பொறுத்திருந்து கேட்போம் -- ஓம் நமோ நாராயணாய.

ராஜப்பா
09:40 காலை
18 - 11 - 2010

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை