Skip to main content

கணபதி சுப்ரமணியம் கிருஹப் ப்ரவேஸம் - 06.05.2011

கிருத்திகாவின் பெற்றோர் (Mrs and Mr. TS கணபதி சுப்ரமணியம்) தங்களுடைய புது இல்லத்தின் கிருஹப் ப்ரவேஸத்தை நேற்று, வெள்ளிக்கிழமை, 06 மே 2011 அன்று நடத்தினார்கள். இவர்களது வீடும் அர்விந்த்-கிருத்திகாவின் புது வீடும் ஒரே கட்டிடத்தில் 2ஆம் மாடியில், முதல் மாடியில் உள்ளன.

காலை 8-30க்கு கோ-பூஜையுடன் விழா துவங்கியது. பின்னர் கிருஹப் ப்ரவேஸம். அடுத்து பால் காய்ச்சி குடித்தல்.


பின்னர் ஹோமம்.சுமார் 11-30க்கு விழா முடிவுற்றது. மிகக் குறைந்த பேர்களையே அவர் அழைத்திருந்தார். மொத்தமே 20-ஐ தாண்டவில்லை. காயத்ரி, குழந்தைகள் துறையூர் சென்றுள்ளனர்; அருண் மட்டும் வருவதாக இருந்தான்; கடைசி நேரத்தில் அவனால் வர இயலவில்லை.


அதிதி தன் புது பட்டுப் பாவாடையில் ஜொலித்தாள். அவளுக்கு மிகவும் சந்தோஷம், பெருமை. பாவாடை சலசலக்க இங்கும் அங்கும் ஓடிக்கொண்டேயிருந்தாள்.

சாப்பாட்டிற்குப் பின்னர், வீட்டை ”ஒழித்து விட்டு” நாங்கள் 3 மணிக்கு பெஸண்ட்நகர் திரும்பினோம். விழா வைதீக காரியங்களில் நன்கு நடந்தது; ஆனால், காடரர் ஸ்ரீனிவாஸன் காலை வாரிவிட்டார்; காஃபியோ, மதியம் சாப்பாடோ சரியான சமயத்தில் வரவில்லை. அர்விந்த் போய் சாப்பாட்டை எடுத்து வர வேண்டியிருந்தது. பரிமாற பாத்திரங்களோ, உதவிக்கு ஆட்களோ இல்லவே இல்லை. விஜயாவும், கிருத்திகாவும், அர்விந்தும் தான் முழுக்க முழுக்க பரிமாறினார்கள். ஸ்ரீனிவாஸனுக்கு இது ஒரு சவாலாக அமைய வேண்டும்.

ராஜப்பா
11:15 மணி
07-05-2011

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை