Skip to main content

Aanmikam and Sevai

இன்று மாலை நாங்கள் இருவரும் திருவான்மியூரில் ஒரு மாபெரும் கண்காட்சிக்கு சென்றோம்.
ஹிந்து ஆன்மீகம் மற்றும் சேவை என்னும் குழுமம் இதை ஏற்பாடு செய்திருந்தது.

தமிழ்நாட்டில், அதுவும் குறிப்பாக சென்னையில் நடக்கும் கோயில்கள், சேவை மையங்கள், உதவிக்கரங்கள் ஆன்மீக மையங்கள் என நூற்றுக்கும் அதிகமாக ஸ்டால்கள் இருக்கின்றன.

திருப்பதி-திருமலா தேவஸ்தானம் முதற்கொண்டு யாதகிரிகுட்டா வரை ஆந்திராவில் உள்ள நிறைய ஸ்தலங்களும், கர்னாடகாவில் உள்ள பல ஸ்தலங்களும், இங்கு ஸ்டால் அமைத்துள்ளன.

இதுதவிர ஆந்திர மாநில கோவில்களின் சுவாமிகளின் திருவுருவோடு தர்மபிரச்சார ரதங்களும் கண்காட்சி அரங்கில் பக்தர்களின் தரிசனத்துக்காக சென்னைக்கு வருகின்றன. ஸ்ரீசைலம், காளஹஸ்தி, காணிப்பாக்கம், த்வரஹா திருமலை, திருமலை திருப்பதி, கனகதுர்க்கா- விஜயவாடா, யாதகிரி குட்டா ஆகிய இடங்களில் இருந்து ரதங்கள் வருகின்றன. இவை கண்காட்சி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

காளஹஸ்தி ரதத்தில் எழுந்தருளியுள்ள ஞானப் பிரசன்னாம்பிகா சமேத காளகஸ்தீஸ்வரருக்கு ராகுகால பூஜைகள் நடக்கிறது. இதேபோன்று விஜயவாடா கனகதுர்க்கா ரதத்தில் எழுந்தருளியுள்ள கனகதுர்க்கைக்கு 11-–ந்தேதி (வெள்ளிக்கிழமை) சண்டி ஹோமம் நடக்கிறது. ஸ்ரீசைலம் பிரமராம்பா தேவஸ்தானம் ரதத்தில் எழுந்தருளியுள்ள பிரமராம்பா சமேத மல்லி கார்ஜூன சுவாமிக்கு 13–ந்தேதி திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. கண்காட்சியின் இறுதி நாளான 14-ந்தேதி அன்று மாலை 5.30 மணிக்கு ஸ்ரீனிவாச திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.

ரதங்களில் எழுந்தருளியுள்ள சுவாமிகளுக்கு அந்தந்தக் கோவில் முறைப்படி பூஜை நைவேத்தியங்களும் நடைபெறுகின்றன. இந்த பூஜைகளில் பங்கு பெற்று பக்தர்கள் இறைஅருள் பெற்று செல்லுமாறு அமைப் பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்

காஞ்சி காமகோடி பீடம், ராமகிருஷ்ணா மடம், விவேகானந்தர் அருள்மொழிகள், மேல்மருவத்தூர் கோயில் இவ்வாறாக நிறைய ஸ்டால்கள்.

சுமார் 1 1/2 மணி நேரம் நடந்தே சுற்றினோம் - மனசுக்கு மிகவும் திருப்தியான அனுபவம்..

இந்த மாஸம் 14-ஆம் தேதி வரை இந்த கண்காக்ஷி இருக்கும். முடிந்தால் வந்து அனுபவிக்கலாம்.
 
rajappa
12-7-2014
 

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை