எங்கள் கல்யாணம் 31-01-1971 அன்று காஞ்சிபுரத்தில் நடந்தது.
இந்த வருஷம் (2018 ஜனவரி) 47 வருஷம் முடிந்து 48ஆவது வருஷம் ஆரம்பித்தது.

ஜன 31 ஆம் தேதி (புதன் கிழமை) காலை சீக்கிரமே எழுந்து, குளித்து, 6-45க்கு டாக்ஸியில் மயிலாப்பூர் கிளம்பினோம். அங்கு ஸ்ரீகற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சென்று அம்மனுக்கும், ஸ்வாமிக்கும் அர்ச்சனை செய்தோம். கோயிலில் நல்ல கூட்டம் இருந்தது. (தைப் பூசம் காரணமோ?). பின்னர் ஸ்ரீ காமாக்ஷி அம்மன் சமேத ஸ்ரீவெள்ளீஸ்வரர் கோயிலுக்கு சென்று அம்மனையும் ஸ்வாமியையும் வணங்கி வழிபட்டோம்.
காலை சிற்றுண்டியை ரத்னா கஃபேயில் முடித்துக் கொண்டு வீடு திரும்பினோம்.
நிறைய அழைப்புகள், செய்திகள். எல்லா உறவினர்களும் வாழ்த்து செய்தி பேசினர். இந்திரா, கணேசன், ரமணி, பட்டு மன்னி ஆகியோருடன் பேசி நமஸ்கரித்தோம்.
ஸ்வீட் வாங்கி இருந்தோம். அர்ஜுன், அதிதி, சௌம்யா, ஸ்ரீராம் ஆகியோருக்கும் மற்றவர்களுக்கும் கொடுத்தோம்.
இவ்வாறாக, இந்த 47-ஆம் கல்யாண நாள் சிறப்பாக நடந்தேறியது.
ராஜப்பா
31-01-2018
இந்த வருஷம் (2018 ஜனவரி) 47 வருஷம் முடிந்து 48ஆவது வருஷம் ஆரம்பித்தது.

ஜன 31 ஆம் தேதி (புதன் கிழமை) காலை சீக்கிரமே எழுந்து, குளித்து, 6-45க்கு டாக்ஸியில் மயிலாப்பூர் கிளம்பினோம். அங்கு ஸ்ரீகற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சென்று அம்மனுக்கும், ஸ்வாமிக்கும் அர்ச்சனை செய்தோம். கோயிலில் நல்ல கூட்டம் இருந்தது. (தைப் பூசம் காரணமோ?). பின்னர் ஸ்ரீ காமாக்ஷி அம்மன் சமேத ஸ்ரீவெள்ளீஸ்வரர் கோயிலுக்கு சென்று அம்மனையும் ஸ்வாமியையும் வணங்கி வழிபட்டோம்.
Kapaliswarar Koil
Sri Velleeswarar Koil, Mylapore
காலை சிற்றுண்டியை ரத்னா கஃபேயில் முடித்துக் கொண்டு வீடு திரும்பினோம்.
நிறைய அழைப்புகள், செய்திகள். எல்லா உறவினர்களும் வாழ்த்து செய்தி பேசினர். இந்திரா, கணேசன், ரமணி, பட்டு மன்னி ஆகியோருடன் பேசி நமஸ்கரித்தோம்.
ஸ்வீட் வாங்கி இருந்தோம். அர்ஜுன், அதிதி, சௌம்யா, ஸ்ரீராம் ஆகியோருக்கும் மற்றவர்களுக்கும் கொடுத்தோம்.
இவ்வாறாக, இந்த 47-ஆம் கல்யாண நாள் சிறப்பாக நடந்தேறியது.
ராஜப்பா
31-01-2018
Comments