Skip to main content

VAITHISWARAN KOIL Jan 2018

வைத்தீஸ்வரன் கோயில்

2018 ஜனவரி 15 ஆம் தேதியன்று வை. கோயில் போகலாம் என எண்ணம் உதித்தது. நிறைய பேருக்கு ஃபோன் பண்ணி விஷயங்களை அறிந்து கொண்டோம். அங்கு ஸ்ரீகிருஷ்ணா ரெஸிடென்ஸி என்னும் லாட்ஜில் தங்க ஃபோன் பண்ணி ரூம் புக் பண்ணினோம். லலிதா குமாரை கேட்டபோது, அவர்களும் வருவதாக சொன்னார்கள். ஸ்ரீ பாலாஜி cabs ல் டாக்ஸி புக் பண்ணினோம். கிமீ 11 ரூ.

22 ஜனவரி திங்கட்கிழமை காலை 7 மணிக்கு ரெடியானோம். லலிதா குமார் 7-30 க்கு வந்தனர். டிரைவரும் அப்போதுதான் வந்தார். 7-40 க்கு கிளம்பினோம். ECR வழியாக சென்றோம். நடுவில் ஓரிடத்தில் நிறுத்தி இட்லி சாப்பிட்டோம். (வீட்டில் விஜயா பண்ணினாள்).

நேராக கடலூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு போனோம். பத்து நிமிஷங்களில் ஸ்ரீ தேவநாதன் குருக்கள் வந்தார். இவருடைய ஃபோன் எண்ணை வாசு வாங்கி தந்தான். அவரிடமும் ஏற்பாடுகள் செய்தான். அவர் அர்ச்சனை பண்ணிவிட்டு, பிரசாதங்கள் கொடுத்தார். 1/2 கிலோ சக்கரை பொங்கல், 1/2 கிலோ புளியோதரை, 1/2 கிலோ தயிர்சாதம் சொல்லியிருந்தேன். பாத்திரங்களும் கொண்டு போயிருந்தோம். நிறய்ய பண்ணியிருந்தார். கொடுத்தார். அங்கேயே, அன்னதான கூடத்தில் இலை போட்டு சாப்பிட்டோம். 50 பேர் ஒரு நாள் சாப்பிட அன்னதானத்திற்கு 1250 ரூ கொடுத்தேன்.




அங்கிருந்து கிளம்பி பாபுராவ் வீதிக்கு சென்று நாங்கள் இருந்த வீட்டை (வெளியிலிருந்தே) பார்த்த பின்னர், சிதம்பரம் கிளம்பினோம்.



மணி அப்போது 2. முதலில் கவரப்பட்டு சென்று சுந்தரம் அண்ணாவை பார்க்கலாம் என அண்ணாமலை நகர், மாரியப்பா நகர் வழியாக கவரப்பட்டு சென்றோம். அண்ணாவிற்கு ஏக சந்தோஷம். ஆஞ்சநேயர் கோயில் ப்ரசாதங்களும், பழங்களும் அவருக்கு கொடுத்தோம். பக்கத்திலுள்ள ஸ்ரீ ராமர் கோயிலுக்கு சென்று ஸ்ரீ ராமரை நமஸ்கரித்தோம்.






பின்னர், வைத்தீஸ்வரன் கோயில் சென்று ஸ்ரீ கிருஷ்ணா ரெஸிடென்ஸியில் தங்கினோம். புது லாட்ஜ். நன்றாக உள்ளது. அம்மன் சன்னிதி தெருவில் பாலாம்பிகை லாட்ஜுக்கு எதிரில் உள்ளது. 800 ரூ வாடகை. அறை எண்கள் 101, 102 ல் தங்கினோம்.


மணி மாலை 5-30. முகம் அலம்பிக் கொண்டு, கோயிலுக்குள் சென்றோம். ஸ்ரீ துரை குருக்கள் வந்து 5 அர்ச்சனை (விநாயகர், முருகன், அங்காரகன், ஸ்வாமி, தையல் நாயகி அம்மன்) செய்தார்.





ரூமிற்கு திரும்பி, ஆஞ்சநேயர் கோயில் புளியோதரை,தயிர் சாதம் சாப்பிட்டு, தூங்கி விட்டோம்.

23 ஜனவரி செவ்வாய்; காலை 6 மணிக்கும் முன்பாகவே எழுந்து, குளித்து, 7-30 க்கு வைத்தீஸ்வரன் கோயிலை விட்டு கிளம்பி, சிதம்பரம் புறப்பட்டோம். மேல வீதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண விலாஸில் காலை டிஃபன் சாப்பிட்டு, மேல கோபுரம் வழியாக, ஸ்ரீ நடராஜர் கோயிலுக்குள் சென்றோம்.







நடராஜரையும், கோவிந்த ராஜன் பெருமாளையும் நமஸ்கரித்து விட்டு, சிவகாமி அம்மன், முருகன் கோயில்களுக்கு (சன்னதிகளுக்கு) போனோம். முருகன் கோயிலிற்கு நேற்று (22-01-2018) கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அடுத்து, கடலூர் கிளம்பினோம். பாடலீஸ்வரர் கோயிலுக்குள் நுழையும் போது மணி 11-30. ஸ்வாமிக்கு அர்ச்சனை பண்ணின பிறகு, ஸ்ரீ ப்ரஹன்நாயகி அம்மனுக்கும் அர்ச்சனை பண்ணினோம். கோயிலை மூட ஆரம்பித்து விட்டனர்.

அங்கிருந்து, புதுச்சேரி சென்று, கொஞ்ச நேரம் சத்குரு ஹோட்டலைத் தேடி, அங்கு பகல் உணவு சாப்பிட்டோம். பகல் 2-30 க்கு புதுச்சேரியை விட்டு கிளம்பி நேராக ECR ல் சென்னை திரும்பினோம்.

வீட்டிற்கு நுழையும் போது மாலை மணி 5.00. இடையில் திருவான்மியூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி, லலிதாவும் குமாரும் வடபழனி சென்றனர்.

24-ஆம் தேதி ஸ்ரீ பாலாஜி cabs ல் ரூ 5500 க்கான செக்  கொடுத்தேன்.

இவ்வாறாக எங்கள் வைத்தீஸ்வரன் கோயில் பயணம் இனிதே முடிந்தது. 5 வருஷங்களுக்குப் பிறகு இப்போது தான் சென்றோம்.

ராஜப்பா
25-01-2018

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை