Skip to main content

ஒரு இனிமையான மாலைப் பொழுது

Bhaja Govintham

திருப்பதி-திருமலா தேவஸ்தானம் நேற்று (31-05-2009, ஞாயிறு) விஜயவாடாவில் “பஜகோவிந்தம்” விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது. காலை முதலே விஜயவாடா பக்தி மழையில் நனைய ஆரம்பித்தது. ஊர் முழுதும் கோவிந்த நாம ஸங்கீர்த்தனம்தான்.

மாலையில் அங்குள்ள ஒரு முனிசிபல் விளையாட்டு அரங்கில், பஜனைகள் ஆரம்பித்தன. பல மடாதிபதிகளும், TTDயின் தலைமை அதிகாரிகளும், சுற்றியுள்ள பல மாவட்டங்களிருந்து பொதுமக்களும், பஜனை மண்டலிகளும் அங்கு குழுமின. லக்ஷத்திற்கும் அதிகமானோர் அங்கு இருந்தனர்.


ஸ்ரீஹரி, ஸ்ரீவேங்கடேசா, ராமர், கிருஷ்ணர், ஹனுமந்தா ஆகியோர் மீது பஜனைப் பாடல்கள் பாடினார்கள். கூடவே லக்ஷம் பேரும் பாடியது கேட்கவே பரமானந்தமாகயிருந்தது. எங்கும் கோலாட்டம், கும்மி, நடனம் ... பார்க்க பரவசமாக இருந்தது.

TTDயின் பக்தி channel SVBC யில் நேரடி ஒளிபரப்பு நான் பார்த்தேன். ஒரு இனிமையான மாலைப்பொழுது.

முன்னதாக, 09-05-2009 ஞாயிறு அன்று,ஹைதராபாதில் Parade ground-ல் அன்னமாச்சார்யாவின் 601-வது பிறந்த நாள் விழாவை TTD ஏற்பாடு செய்தது. ஆந்திராவில் கடப்பா மாவட்டத்தில் தலப்பாகா என்னும் ஊரில் 9 மே 1408-ஆம் வருஷம் அன்னமாச்சார்யா பிறந்தார். ஸ்ரீ வேங்கடேஸப் பெருமாளின் பேரில் 32000 க்கும் மேலாக கீர்த்தனங்கள் இயற்றியவர்.

Parade Ground-ல் ஒரு லக்ஷம் பேர் வருவார்கள் என எதிர்பார்த்து, லக்ஷம் நாற்காலிகள் போட்டிருந்தனர் - ஆனால், வந்ததோ லக்ஷத்து எழுபத்து ஐந்தாயிரம் !! அத்தனை பேரும் அன்னமாச்சார்யாவின் கீர்த்தனைகளை ஒன்றாகப் பாடினார்கள். நினைத்துப் பாருங்கள், 1,75,000 பேர்! (இது ஒரு கின்னஸ் ரிகார்ட். லக்ஷம் நாற்காலிகள் போட்டது இன்னொரு ரிகார்ட்).

ராஜப்பா
காலை 09:00, 01-06-2009

Comments

Sudhakar said…
Twin record created in one shot. By the by, how many sing in Thyagaiyer urchavam? Any idea? I do not know.

Sudhakar
01-06-2009

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை