Skip to main content

மெரீனா கடற்கரை (5) Marina Beach

நேற்று மாலை (22-ஜனவரி) நாங்கள் மெரீனா கடற்கரை சென்றோம். திருவான்மியூரில் பஸ்ஸுக்காக 20-25 நிமிஷங்கள் காக்க வேண்டியிருந்தது. இங்கிருந்து திருவல்லிக்கேணி உழைப்பாளர் சிலை வரை பஸ் டிக்கெட் ரூ 13.00 . அங்கு இறங்கி நடக்க ஆரம்பித்தோம். சமீபத்தில் நெருப்புக்கு இரையான சேப்பாக் அரண்மனை - தற்போது ”எழிலகம்” - இருளில் மூழ்கியிருந்தது.

உழைப்பாளர் சிலை
மெரீனா கடற்கரை மிக ரம்மியமாக, அழகாக இருக்கிறது. ஒரு பக்கம் வங்கக்கடல், இன்னொரு பக்கம் 300 வருஷ தொன்மையான வரலாற்றுப் புகழ்பெற்ற கட்டிடங்கள். நடக்க பளபளக்கும் நடைபாதை. எங்கும் ஒளி வெள்ளம். ஓ, மெரீனாவின் அழகே தனிச் சிறப்புதான். அதுவும் நேற்று மெல்லிய குளிர் காற்று இதமாக வீசிக் கொண்டிருந்தது.

விவேகானந்தர் இல்லத்திற்கு (ICE HOUSE) எதிரில் 15 நிமிஷங்கள் அமர்ந்து ஆர்ப்பரிக்கும் அலைகளை ரசித்தோம். பின்னர் காந்திஜி சிலை நோக்கி நடந்தோம்.
VIVEKANANDAR ILLAM [ICE HOUSE]

இன்னும் 4 நாளில் வர இருக்கும் குடியரசு தின விழாவிற்காக காந்திஜி “எண்ணெய் தேய்த்து குளித்து” பளபள என ஜொலித்தார். விழாவிற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து கொண்டிருந்தன. “செந்தமிழ் நாடெனும் போதினிலே ...” பாட்டு எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது.

ராணி மேரிக் கல்லூரி பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறி வீடு திரும்பினோம். Queen Mary என எழுதுவதற்கு பதிலாக Queen MARRY" என பஸ் நிறுத்தத்தில் எழுதியிருக்கிறார்கள்.

Queen Mary's College
இரண்டு மணி நேரம் மிக இனிமையாக கழிந்தது.

ராஜப்பா
08:30 AM
23 Jan 2012





Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை