Skip to main content

ஸ்ரீ மத் பாகவதம் 11 வது ஸ்கந்தம் - ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன்

11-வது ஸ்கந்தம் இன்று (17-11-2011) காலை துவங்கியது. இது 31 அத்தியாயங்கள் அடங்கியது.

இந்த 11-ஆம் ஸ்கந்தம் முதல் அத்தியாயத்தில் யது குலம் அழியப் போகிறது என்பதற்கான அறிகுறிகள் சொல்லப்படுகின்றன. குருக்ஷேத்திர யுத்தத்தில் பல பேரை அழித்த பகவான் ஸ்ரீகிருஷ்ணன், இப்போது கர்வமும் திமிரும் படைத்த தன்னுடைய யது குலத்தையே அழிக்க திருவுள்ளம் கொண்டார்.

யதுகுல சிறுவர்கள் எப்படி சாம்பா என்னும் சிறுவனை ஒரு பிள்ளைத்தாய்ச்சி பெண் போல நடிக்க வைத்து ரிஷிகளை ஏமாற்ற நினைத்தார்கள், விஸ்வாமித்ரா, அசிதா,கண்வா, துர்வாஸா, ப்ருகு, ஆங்கீரா, காஷ்யபா, வாமதேவா. அத்ரி, வஸிஷ்டா ஆகிய ரிஷிகள் கோபமடைந்து எப்படி ”ஒரு உலக்கையினால் உங்கள் யதுகுலமே நாசமாகும்,” என சபித்தார்கள், எப்படி உலக்கை யதுகுலத்தையும் ஸ்ரீகிருஷ்ணனையும் முடித்தது என்பதை முதல் அத்தியாயம் விளக்குகிறது [11:01]

11:02 நாரதர் வசுதேவருக்கு பாகவத தர்மத்தை விளக்குகிறார். விதேஹ நாட்டு மஹாராஜா நிமி ஒன்பது யோகேந்திரர்களிடம் “பாகவத தர்மத்தை” விளக்கிச் சொல்லுமாறு வேண்ட, ஒவ்வொரு ரிஷியாக தர்மத்தைப் பற்றி சொல்லுகிறார்கள்.

11:03 இதில் பகவானின் மாயா குறித்து விவரமாக மஹாராஜா நிமிக்கு சொல்லப்படுகிறது. கர்ம யோகமும் விளக்கப்படுகிறது.

11:04 பகவானின் பல்வேறு அவதாரங்கள் பற்றி சொல்லப்படுகிறது. ஹமஸா, தத்ராத்ரேயா, ஸனக குமாரர்கள், ரிஷபதேவா, ஹயக்ரீவா அவதாரங்கள் சொல்லப்ப்டுகின்றன.

வராஹனாக அவதரித்து ஹிரண்யாக்‌ஷனை அழித்தது; கூர்மனாக மந்தர மலையை தூக்கியது; நரஸிம்ஹனாக ஹிரண்யகஸிபுவை அழித்தது; வாமன ரூபத்தில் பலி மஹாராஜவை முடித்தது; பரஸுராமனாக் க்ஷத்திரயர்களை 21 முறை அழித்தது; ஸ்ரீராமனாக ராவணனை அழித்தது; ஸ்ரீகிருஷ்ணனாக கௌரவர்களையும் யதுகுலத்தையும் முடித்தது; இன்னும் புத்த மற்றும் கல்கி அவதாரங்களைப் பற்றியும் விவரமாக மஹாராஜா நிமிக்கு சொல்லப்படுகிறது.

11:05 நான்கு வருணங்கள் மற்றும் நான்கு யுகங்களில் பகவானின் விசேஷங்கள் விளக்கப்படுகின்றன. இத்துடன் வஸுதேவருக்கு நாரதர் சொன்னவை முடிவுறுகின்றன.

11வது ஸ்கந்தம் தொடரும்.
 
ராஜப்பா
29-01-2012
காலை 9 மணி

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை