Skip to main content

Horoscope Developing


நெடுநாட்களாகவே எனக்கு ஜாதகம் கணிக்க வேண்டும், அதுவும் நானே எழுதிய மென்பொருளை(Software) உபயோகித்து கம்ப்யூட்டரில் கணிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு.

வேலையிலிருந்து ஓய்வு பெற்று 2001 டிசம்பரில் சென்னை வந்ததும் இந்த ஆசை மீண்டும் துளிர்த்தது. கிரியில் நிறைய புஸ்தகங்கள் வாங்கி, படித்து என் ஜாதக அறிவை வளர்த்துக் கொண்டேன். இதில் முக்கியமாக Dr BV RAMAN எழுதிய சில புஸ்தகங்களும் அடங்கும். BV ராமனின் 2001-2050 க்கான 50-வருஷ EPHEMERIS புஸ்தகம் மிகவும் முக்கியமானது.

Ephemeris என்பது விண்வெளியில் சூரியன் முதலான எல்லா க்ரஹங்களின் தினப்படி நிலையை (டிகிரியில்) அவைகள் சுழலும் விதிப்படி கணித்து புஸ்தகத்தில் போடுவது. 2001 தொடக்கம் 2050 வரை 50 வருஷங்களுக்கும் ஒவ்வொரு நாளுக்கும் (50 X 365 நாட்கள்) இந்த டிகிரி (LONGITUDE in Degrees-Minutes) ராமனின் இந்த புஸ்தகத்தில் போடப்பட்டுள்ளது. இது இல்லாமல் ஜாதகம் கணிப்பது முடியாது. ஜூலை 2002-ல் இதை வாங்கினேன். இதுவும் கிரியில்தான் வாங்கினேன்.

பல புஸ்தகங்கள், பாம்பு பஞ்சாங்கம் இவற்றைப் படித்து கொஞ்சம் ஜாதக அறிவு வந்ததும், Microsoft EXCEL உபயோகித்து முதல் ஜாதகத்தை கணித்தேன். அதற்கு அப்புறம் எல்லாவற்றையும் தமிழுக்கு மாற்றினேன். அடுத்து, ஆண்டுக்கு ஏற்றவாறு ராமன் அயனாம்சத்தையும், லாஹிரி அயனாம்சத்தையும் கம்ப்யூட்டரில் எங்கேயோ பார்த்து இதில் வரைப்படுத்தி உபயோகித்தேன். இரண்டு, மூன்று மாதங்கள் உழைத்தேன். வெற்றி கிட்டியது.

ஸௌம்யா, அதிதி, ஸ்ரீராம், அர்ஜுன் இவர்களின் ஜாதகங்களை இப்போது துல்லியமாக கணித்துள்ளேன். அதுவும் தமிழில். எல்லாம் ஸ்ரீ BV Raman Sir க்கே அர்ப்பணம்.

ராஜப்பா
06-09-2012
காலை 10 மணி





Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை