Skip to main content

ஸ்ரீ பார்த்தஸாரதி பெருமாள் கோயில்


ஸ்ரீ பார்த்தஸாரதி பெருமாள்.

திருவல்லிக்கேணியில் எழுந்தருளியுள்ள வேதவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ பார்த்தஸாரதி பெருமாள் எனக்கு மிகவும் பிடித்த பகவான்.

நேற்று (9-9-2012) ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு இந்தக் கோயிலுக்கு போகவேண்டும் என்ற ஆசை திடீரென எனக்குள் எழுந்தது. விஜயாவும் நானும் 4-15க்கு கிளம்பி விட்டோம். திருவான்மியூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஏதோ ஒரு பஸ்ஸை பிடித்து திருவான்மியூர் ரயில் நிலையம் சென்று, ஏறி, இறங்கி 5-15 மணி ரயிலை பிடித்தோம். 5.00 டிக்கெட். [மந்தைவெளி போக பஸ்ஸில் கட்டணம் என்ன தெரியுமா? ரூ 11.00]

5.30 சுமாருக்கு திருவல்லிக்கேணி ஸ்டேஷனில் இறங்கி, கண்ணகி சிலை தாண்டி, PYCROFTS ROADல் [பாரதி சாலை] திரும்பி, ஆட்டோ பிடித்து, ஸ்ரீ பார்த்தஸாரதி கோயிலுக்கு சென்றோம். என்ன ஒரு தெய்வீகமான சூழ்நிலை! கோயிலில் நிறையக் கூட்டம் இல்லை. 10 நிமிஷங்கள் க்யூவில் நின்ற பிறகு பெருமாளின் தரிஸனம் கிடைத்தது. நம் அருகில் வந்து நின்று காதில் கீதோபதேசம் சொல்வதாக எண்ணம் வருகிறது.

கிட்ட நின்று, கீதாசாரியனை, ”பிதா அஹம் அஸ்ய ஜகதோ மாதா தாதா பிதாமஹ” என்று உலகத்திற்கே தந்தை, தாயான அந்த பரமாசாரியனை வணங்கி வேண்டிக் கொண்டு, ஸ்ரீ வேதவல்லித் தாயாரையும் நமஸ்கரித்துக் கொண்டு, ஆண்டாள், யோக நரஸிம்ஹர் போன்றோரையும் வணங்கினோம்.

பார்த்தசாரதிக்கு முத்துக்களால் அலங்கரிக்கும் முத்தங்கி ஸேவை சார்த்தியிருந்தார்கள் - கண்கொள்ளா காக்ஷி, என்ன அழகு! சன்னதிக்கு அருகில் ராமரும் ஸீதம்மாவும் பட்டாபிஷேகக் கோலத்தில் திவ்ய தரிஸனம் தருகிறார்கள்.

இதற்கு முன்பு ஜூன் 2011, அக்டோபர் 2009, மே 2008 என இந்தக் கோயிலுக்கு போயிருக்கிறோம். இதே வலைப்பதிவில் படிக்கலாம்.

ராஜப்பா
காலை 11 மணி
10-09-2012

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை