Skip to main content

ஸதாபிஷேகம்

Sathabishekam

புதுதில்லியில் தனது மாமா ஸ்ரீதண்டபாணி ஐயர் அவர்களின் ஸதாபிஷேகம் நவம்பர் 30-ஆம் தேதியன்று மிக சிறப்பாக நடந்ததை குறித்து எழுதியபோது, வாசு இவ்வாறு சொல்லியிருந்தான் --- “Sadhabishegam is a rare event and if anyone had an opportunity to attend such function considered to be lucky. Had an opportunity to attend the Sadhabishegam of my uncle Dhandapani on 30th Nov 2012 at Gurgaon.... “ மிகவும் உண்மை.

யாருடைய ஸதாபிஷேகம் விழாவில் நான் கலந்து கொண்டிருக்கிறேன் என ஒரு நிமிஷம் யோசித்தேன் --- ஊஹூம், நம் அப்பாவின் ஸதாபிஷேகம் தான் நான் கலந்துகொண்ட ஒரே ஸதாபிஷேகம். (நம் உறவினர்களில், இதுவரை). அது 1979-ல். கடந்த 33 வருஷங்களில் ...? ஊஹூம்.

சௌ நீரஜாவின் அம்மா வழி தாத்தா ஸ்ரீமான் நாகராஜ ஐயரின் ஸதாபிஷேகம் சில வருஷங்களுக்கு முன் சென்னையில் நடந்தது; அதற்கு போயிருந்தேன். வாசு எழுதியது போல, இது ஒரு அற்புதமான, அரிய நிகழ்வு.

நமது ப்ராஹ்மண சமூகத்தில் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் மொத்தம் 16 ஸம்ஸ்காரங்கள் (ஷோடஸ ஸம்ஸ்காரங்கள்) செய்து கொள்ள வேண்டுமென சாஸ்திரங்கள் / வேதங்கள் கூறுகின்றன. அதில் ஒன்றுதான் ஸதாபிஷேகம் என்பது. ப்ரஹ்மசரியம், க்ரஹஸ்தம், வானப்ப்ரஸ்தம், முக்தி அபீஷ்டம் என 4 நிலைகள் ஒவ்வொரு ப்ராஹ்மணனுக்கும் உள்ளன. க்ரஹஸ்தம் முடியும்போது தனது 60-வது வயஸில் ஸஷ்டிஅப்த பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். வானப்ரஸ்தம் நுழைய இதுதான் முதல் வாயில்.

70-வயஸில் செய்து கொள்ளும் பீமரத ஸாந்தி வானப்ரஸ்தத்தின் முதல் நிலை முடிவு பெற்றதை அறிவுறுத்தும். 70க்குப் பின்னர் இரண்டாம் நிலை துவங்கும். இரண்டாவது நிலையின் முடிவை ஸதாபிஷேகம் சொல்கிறது. இதன் பின்னர் முமுக்‌ஷு எனப்படும் மோக்ஷ நிலை ஆரம்பிக்கிறது; அடுத்த பிறவி எடுக்காமல் இருக்க செய்யவேண்டிய கர்மங்களை 80-க்குப் பிறகு கட்டாயம் செய்யவேண்டும். The Man has completed all his Family-duties and Mundane-commitments... gets trotally relieved from the Monetary-involvements handed over to his children to continue on their own independantly on reaching 80.

1000 சந்திர தரிஸனம் (பௌர்ணமி) பண்ணினவர்கள் ஸதாபிஷேகம் செய்து கொள்வர். வருஷத்திற்கு 12 பௌர்ணமி எனக் கொண்டால், 1000 பௌர்ணமிகளை தரிஸிக்க, 80 வருஷங்களும், 40 மாஸங்களும் ஆகும். எனவேதான் சிலர் தங்களுடைய 85-வது வயஸில் ஸதாபிஷேகம் செய்து கொள்வார்கள்.

ஆனால் தெலுங்கு கணக்குப்படி, 2 1/2 (2.5) வருஷங்களுக்கு ஒருமுறை வருஷத்தில் ”அதிக-மாஸம்” என ஒரு மாஸம் அதிகரிக்கும். இந்த அதிக-மாஸ வருஷத்தில் மொத்தம் 13 மாஸங்கள் இருக்கும். தற்போது நடக்கும் நந்தன வருஷம் (2012) ஒரு அதிக-மாஸ வருஷமாகும். 2 1/2 வருஷங்களுக்கு ஒருமுறை என்றால், 80 வயஸில் [80 / 2.5 = 32] 32 அதிக மாஸங்கள் வந்திருக்கும். எனவே 960 + 32 = 992 பௌர்ணமிகள் தரிசித்து இருப்பார்கள். 80 முடிந்து இன்னும் எட்டு மாஸங்களில் 1000 பூர்த்தியாகும்.

ஆக, நிறைய பேர் தங்களுக்கு 80 வயசு + 8 மாஸங்கள் பூர்த்தியானதும் ஸதாபிஷேகம் செய்து கொள்வார்கள்.

”ஸதாபிஷேகம் / பீமரத ஸாந்தி / ஸஷ்டி அப்த பூர்த்தி” இவைகளை செய்து கொள்ளும் பெரியோர்களும், இவற்றை பண்ணி வைக்கும் அவர்களது புத்திரர்களும் மிக மிக மிக புண்யம் செய்தவர்கள். எல்லாரையும் ஆண்டவன் ஆசீர்வதிப்பார்.

ராஜப்பா
2-12-2012
சென்னை

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை