Skip to main content

Sri Ramajayam Naama

நேற்று (06-07-2009) காலை 8 மணி அளவில், விஜயாவும் நானும் மாம்பலம் சென்றோம். லஸ்ஸிலிருந்து 12G பஸ்ஸில் அங்கு போனோம். (உமா) சுந்தரின் அண்ணா முரளீதரனின் மகனுக்குக் கல்யாணம். மங்களமும், கோபியும் எங்களுடன் 12G யில் வந்தனர். வழக்கமான காலை சிற்றுண்டி, மதிய உணவிற்குப் பின், அங்கிருந்து கிளம்பினோம்.

இடையில், மாம்பலம் விநாயகர் தெருவிலுள்ள ஸ்ரீராம் மந்திருக்கு சென்றோம்; ராமமூர்த்தி அத்திம்பேர், கோபி, மங்களமும் வந்தனர். இந்த இடத்தில் “ஸ்ரீராம நாம வங்கி” உள்ளது. சென்னை மற்றும் பல இடங்களில் பலரும் எழுதும் ஸ்ரீராமஜெயம் நாம நோட் புஸ்தங்களை இங்கு சேமித்து வருகின்றனர். இது (ஜூன் 2009) வரை 500 கோடி நாமாக்கள் சேர்ந்துள்ளன. அழகாக, பத்திரமாக இவற்றை பாதுகாத்து வைத்துள்ளனர். எண்ணிக்கை 1000 கோடியானதும், எல்லாவற்றையும் அடித்தள்த்தில் வைத்து, மேலே ஸ்ரீராமனுக்குக் கோயில் கட்ட எண்ணியுள்ளார்கள். 2011 ஆரம்பத்தில் இது நடக்கும் எனச் சொன்னார்கள். பார்க்க பரவசமாக இருக்கிறது.

உங்கள் வீட்டில் ஸ்ரீராமஜெயம் நாமா எழுதிய புஸ்தகங்கள் இருந்தால், அவற்றை இங்கு கொண்டு வந்து கொடுத்து 1000 கோடி முயற்சியில் நீங்களும் பங்கு பெறுங்கள். கோயில் கட்டும் பணியில், மற்றும் அன்னதான பணியில் உங்கள் அன்பளிப்பையும் தரலாம்.

ராஜப்பா
09:50 மணி
07-07-2009

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை