Skip to main content

சூர சம்ஹாரம் Soora Samharam

சூரபத்மன் என்ற அசுரன் கடுமையான தவம் புரிந்து, “தற்போது இருக்கும் எந்த தெய்வத்தாலும் தான் கொல்லப்படக் கூடாது” என்ற வரத்தைப் பெற்றான். பின்னர் தான் கொல்லப்பட மாட்டோம் என அஹம்பாவம் கொண்டு எல்லா தேவர்களையும் துன்புறுத்த ஆரம்பித்தான். பரமசிவன் இவனை அழிப்பதற்க்காக ஒரு புதிய தெய்வத்தை, தனது ஞானக் கண்ணினால் உருவாக்கினார் - இவர்தான் கந்தன், சுப்பிரமணியம், கார்த்திகேயன், ஆறுமுகம் என பலப் பல பெயர்களால் அழைக்கப்படும் முருகப்பெருமான். பார்வதி தேவி முருகனுக்கு வீர வேல் வழங்கினார்.

முருகன் சூரபத்மனை எதிர்கொண்டதே கந்த சஷ்டி என்று கொண்டாடப் பெறுகிறது. ஆஸ்வீன (ஆஷாட) மாசத்தில் சுக்ல அமாவாசை முதல் ஆறு நாட்களுக்கு இந்த விழா எல்லா முருகன் கோயில்களிலும் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இந்த ஆறு நாட்களிலும் பக்தர்கள் சஷ்டி விரதம் இருப்பார்கள்.

கஜமுகாசுரன், சிங்கமுகாசுரன், சூரபத்மன் ஆகிய அசுரர்களுடன் ஆறு நாட்கள் போரிட்ட முருகப்பெருமான், ஆறாம் நாள் சஷ்டியன்று அசுரர்களை அழித்த சூர சம்ஹாரம் நடைபெறும். எல்லா முருகன் கோயில்களிலும் லக்ஷக்கணக்கில் பக்தர்கள் வந்து இதைக் கண்டு களிப்பார்கள். சமுத்திரம், அல்லது வேறு நீர்நிலைகளில் ஸ்நானம் செய்து தங்கள் சஷ்டி விரதத்தை முடிப்பார்கள்.

இந்த வருஷம் (2009, விரோதி வருஷம்) இன்று அக்டோபர் 23 சூர சம்ஹாரம் கொண்டாடப்பெற்றது. திருச்செந்தூரில் நடைபெற்ற சூர சம்ஹாரத்தை “பொதிகை டீவியில்” நேரடி ஒளிபரப்பு மூலம் பார்த்தோம்.

ராஜப்பா
20:10 on 23 Oct

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை