Skip to main content

ஸீதாப் பழம் Sitafal

Sitafal, Ramfal, Custard Apple, Sugar apple எனப் பல பெயர்களால் அழைக்கப்படும் ஸீதாப்பழம் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பழம். எனக்கு மட்டுமல்ல, விஜயா, அருண், அஷோக், அர்விந்த் எல்லாருக்குமே மிகப் பிடித்தது.

ஆந்திர மாநிலத்தில் இப்பழம் நிறைய விளைகிறது. பெரும்பாலான ஆந்திரமக்கள் இதை விரும்பி சாப்பிடுவார்கள். நாங்கள் 27 வருஷங்களுக்கும் மேலாக் ஹைதராபாதில் வாழ்ந்தபடியால் எங்களுக்கும் பிடித்து விட்டது. ஹைதராபாதில் ஸீதாப்பழம் கொட்டி கொட்டி கிடைக்கும். பெங்களூரிலும் இது நிறைய கிடைக்கும். தமிழ்நாட்டில் இது கிடைப்பது அரிது.


ஹைதராபாதில் ”ஸீதாஃபல் மண்டி” என்றே ஒரு இடம் அழைக்கப்படுகிறது. 1990-91 என நினைக்கிறேன் - என்னுடைய அசிஸ்டெண்டிடம் “மண்டியிலிருந்து கொஞ்சம் ஸீதாப்பழம் வாங்கி” வரச் சொன்னேன். சனிக்கிழமை காலை அவனும் வாங்கி வந்தான் - திகைத்து விட்டோம்! நம்பினால் நம்புங்கள், ஒரு பெரிய கோணிப்பை நிறைய - 150-200 பழங்கள் இருக்கும் - வாங்கி வந்தான். “மிக மலிவு” என்று சமாதானம் சொன்னான். ஆனால், சாப்பிட்டு முடித்து விட்டோம்.

பழம் இனிப்பாக இருக்கும்; கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளை நிற “சுளைகளை” மென்று விட்டு, உள்ளே இருக்கும் கறுப்பு நிற கொட்டைகளை துப்பி விட வேண்டும். இரண்டு வருஷங்களுக்கு முன்பு பம்பாய் தாணேயில் ஸீதாப்பழ ஐஸ்க்ரீம் சாப்பிட்டோம்.  ஸீதாப்பழத்தில் நிறைய சத்துக்கள் உள்ளன.

ராஜப்பா
20:40
23 Oct 2009

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை