Skip to main content

மார்கழி 2010

இந்த வருஷம் (2009-2010 விரோதி) மார்கழி மாஸம் 2009 டிஸம்பர் 16ஆம் தேதியன்று பிறந்தது. முதல் நாள் நான் அருகிலுள்ள ஸ்ரீ ரத்னகிரீஸ்வரர் கோயிலுக்குப் போனேன் என்றாலும், அடுத்த ஒன்பது நாட்களுக்குப் போகமுடியவில்லை – உடல் நலம் சரியாக இல்லாததால் காலை வேளைகளில் வெளியே கிளம்பவே முடியவில்லை.

மீண்டும் டிஸ 27-ஆம் தேதிமுதல் போக ஆரம்பித்தேன். 0415க்கு அல்லது 0430க்கே எழுந்து குளித்து, என்னுடைய வழக்கமான பாராயணங்களை சொல்லிவிட்டு, ஸ்ரீமத் பாகவதம் உபந்யாஸம் முடிந்ததும் 0645க்கு செல்வேன். ஸ்வாமி தரிஸனத்திற்குப் பிறகு சுடச்சுட வெண்பொங்கல் கிடைக்கும். ஈஸ்வரன் கோயிலிலிருந்து ஸ்ரீவரஸித்தி விநாயகர் கோயிலுக்குச் செல்வேன்; பிறகு வீடு.
டிஸம்பர் 30ஆம் தேதி முதல் விஜயாவும் வர ஆரம்பித்தாள்; காலை 0515க்கு எழுந்து, குளித்து, பாராயணம் சொல்லிவிட்டு அவளும் என்னுடன் தினமும் வர ஆரம்பித்தாள்.

இந்த வழக்கம் மார்கழி முழுதும் நீடித்தது. தினமும் காலையில் சரோஜா அக்காவை கோயிலில் சந்திப்போம். அவள் தன் வீட்டிற்கு கிளம்பியதும் நாங்கள் விநாயகர் கோயிலுக்கும் சென்று விட்டு, வீடு திரும்புவோம். தினமும் பொங்கல் பிரஸாதம் கிடைக்கும்.

இதோ, இன்று 2010 ஜனவரி 13ஆம் தேதி – மார்கழி மாஸம் நிறைவு பெற்றது. இவ்வளவு நாட்கள் தினந்தோறும் ஸ்வாமி தரிஸனம், காலை வேளை நடை என காலைப்பொழுது இனிதாக மன நிறைவாகக் கழிந்தது. அடுத்த மார்கழி வரை இனி காக்க வேண்டும்.

”மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்

ராஜப்பா
13-01-2010
19:25

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை