Skip to main content

கோயில்கள்

சென்ற ஒரு மாதமாக மார்கழியில் அருகிலுள்ள ஸ்ரீரத்னகிரீஸ்வரர் கோயிலுக்கும், ஸ்ரீ வரஸித்தி விநாயகர் கோயிலுக்கும் மட்டுமே சென்று கொண்டிருந்தேன். தற்போது, தை பிறந்து விட்டது (இன்று தை 2).

காலை 7 ம்ணிக்குக் கிளம்பி, நடையாகவே ஆறுபடை முருகன் கோயிலுக்குச் சென்றேன். வீட்டிலிருந்து 25 நிமிஷங்கள் ஆகிறது. ஒரு வருஷத்திற்கும் மேலாக இந்தக் கோயிலுக்குச் செல்லவில்லை. Coastal Road வழியாகச் செல்லவேண்டும்.

ஸ்வாமிமலை ஸ்வாமிநாதன், பழனி ஆண்டவன், திருத்தணி முருகன், திருச்செந்தூர் செந்திலாண்டவன், திருப்பரங்குன்றம் முருகன், பழமுதிர்ச்சோலை முருகன் ஆகிய ஆறு முருகப்பெருமான்களுக்கும் இங்கு சன்னதிகள் உள்ளன. ஊரிலிருந்து கொஞ்ச தூரத்தில் இருப்பதால், இந்தக் கோயிலில் சாதாரணமாக கூட்டம் வராது.

மாலை 5 ம்ணிக்கு நானும், விஜயாவும் நடையாகக் கிளம்பி, திருவான்மியூர் ஸ்ரீ மருந்தீஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம்; 37 நிமிஷங்கள் ஆயிற்று. இன்று “மாட்டுப் பொங்கல்” – எனவே கோயிலில் உள்ள பசுக்களுக்கு விசேஷ பூஜைகள் பண்ணினார்கள். ஸ்வாமியையும், ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மனையும தரிஸித்துக் கொண்டு வீடு திரும்பினோம் (பஸ்ஸில்).

காலையிலும், மாலையிலும் கோயில்களுக்குச் சென்றது மனசுக்கு நிறைவாக உள்ளது.

ராஜப்பா
15-01-2010
மாலை 7-45

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை