Skip to main content

விடியல் நேரத்தில் ...

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவுகின்றனவோ இல்லையோ, புள்ளும் சிலம்பியதோ இல்லையோ, புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்கிறதோ இல்லையோ ... விடியற்காலை. பொழுது எப்போதுமே, எந்த ஊரிலுமே மிக இனிமையான பொழுது என்பது உண்மை.

6-45 மணி என்பதை சிற்றஞ் சிறுகாலை எனச் சொல்ல முடியாவிட்டாலும், ”விடியற்காலை” எனச் சொல்லலாமா? அந்த இனிமையான நேரத்தில் சென்னையில் என்ன நிகழ்கிறது? அதோ பாருங்கள் - புத்தம் புதிய, அச்சு மையின் நறுமணத்தோடு கூடிய செய்தித்தாள்கள் கட்டுக் கட்டாக அடுக்கப்பட்டுள்ளன! தமிழில்தான் எத்தனை எத்தனை நாளேடுகள், வார. மாத இதழ்கள் !! எல்லாம் வண்ண மயம். விற்பனை பரபரப்பு.

எதிரிலே, வண்டியிலே சுடச்சுட (நிஜமாலுமே சூடாக) இட்லி, தோசை வார்த்துக் கொண்டிருக்கிறார்கள் - இட்லி மணமும், சாம்பார் மணமும் “வா வா” என அழைக்கின்றன. வண்டியைச் சுற்றி 5 - 6 பேர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நமக்குத்தான் வறட்டு கௌரவம் ....

ரோடை கடக்க வேண்டுமா, பார்த்து கடக்கவும்; காலை 6-45 தானே என அலக்ஷியம் வேண்டாம். வேல், பனிமலர், வெங்கடேசா, செட்டிநாடு வித்யாக்ஷ்ரம், PS செகண்டரி ஸ்கூல் என பல பஸ்கள் ரேஸ் ஓடும். கூடவே பல IT ஆஃபீஸ் பஸ்கள். மிக கவனம் தேவை.

அது என்ன, ஒரே கூட்டம்? ஓ, பஸ் ஸ்டாப்பா? ஸ்கூல், கல்லூரி, ஆஃபீஸ் போகும் சிறார்கள், இளைஞர்/ இளைஞிகள் கூட்டம் கூட்டமாக 29C, 23Cக்கு காத்திருக்கின்றனர்...

கோயில்களில் ஸ்வாமி, அம்மன் இருவரும் அபிஷேகத்திற்கும், தீபாராதனைக்கும் காத்திருக்கின்றனர் !! எனவே கோயில்களில் நிறைய கூட்டம் கிடையாது. 8 மணிக்குத்தான் வருவார்கள் போல.

இதோ ஆவின் பால் booth. பால் பாக்கெட்டுகளும், மோர், தயிர் பாக்கெட்டுகளும் சுறுசுறுப்பாக விற்பனை ஆகிக் கொண்டிருக்கின்றன. “பாலை வீட்டுக்குக் கொண்டு போனால்தான் காஃபி,” என்பதால் எல்லார் நடையிலும் ஒரு வேகம். இந்த வேளையில் வெண்ணெய் கிடைக்காது

வீதியின் பல இடங்களிலும், பல வீதியோர கடைகளிலும் பச்சை பசேலென்று முளைக்கீரையும், இன்னும் பல்வேறு கீரை வகைகளும் அப்போதுதான் வந்து இறங்கியுள்ளன. நீங்கள் ஒரு கீரைப் பிரியரா, தினமும் கீரை வாங்காமல் போகமாட்டீர்கள். பிஞ்சு வெண்டை, வெளிர்நீல கத்தரி, பட்டை பட்டையாய் அவரை, பார்த்தாலே வாங்கத் தோன்றும் நீள புடலங்காய், ஆரஞ்சு வண்ணத்தில் பிஞ்சு காரட், இளஞ்சிவப்பில் கிள்ளினால் வண்ணம் தெறிக்கும் பீட்ரூட், தளதளவென்று வாழைக்காய், வாசனை அள்ளிக் கொண்டு போகும் கொத்தமல்லி, கருவேப்பிலை, புதினா. ... ஓ, எழுதி மாளாது. எல்லார் கையிலும் ஒன்றிரண்டு பைகள், பை நிறைய புத்தம்புதிய காய்கள்.

இனிமையான விடியற்கால அனுபவங்கள் தொடரும் ...

ராஜப்பா
10:45  மணி
11-10-2010

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை