Skip to main content

The Lamps

சென்னையின் பல தெருவோரங்களிலும், கடற்கரைகளிலும், இன்னபிற இடங்களிலும் தள்ளுவண்டிகளில், இரவு நேரங்களில் பளிச்சென ஒளி வீசிக்கொண்டிருக்கும் மின் ட்யூப் விளக்குகளைப் பார்த்திருப்பீர்கள். (உங்கள் ஊர்களிலும் கூட இவை காணப்படும்)

இந்த விளக்குகளுக்கு மின்இணைப்பு எங்கிருந்து கிடைக்கிறது என்பது எனக்கு ஒரு வியப்பான விஷயமாக இருந்து வந்தது. சென்ற மாதத்தில் ஒரு மாலைப் பொழுதில் தெருவில் நான் நடந்து கொண்டிருக்கையில் திடீரென எனது கவனம் ஒரு சைக்கிள்-ரிக்‌ஷா போன்ற ஒரு வண்டியின் மீது விழுந்தது.

அந்த வண்டியில் ஒரு ஆள் கிட்டத்தட்ட 50-60 விளக்குகளை (பார்ப்பதற்கு பழைய பெட்ரோமாக்ஸ் விளக்குகளை போலிருக்கும்) ஏற்றி வந்து ஒவ்வொரு தள்ளுவண்டிக்கும் ஒன்று அல்லது இரண்டு விளக்குகள் வீதம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுதுதான் மர்மம் துலங்கியது - 100-200 விளக்குகளை வாங்கி தினமும் பகல் பொழுதில் அவற்றின் BATTERY களை Charge பண்ணி மாலை வேளையில் அவற்றை வாடகைக்குக் கொடுக்க வேண்டியது, ஒரு இரவுக்கு இத்தனை என பணம் வசூலித்துக் கொள்வது, பின்பு இரவு 9-30, 10 மணிக்கு திரும்ப வந்து விளக்குகளைப் பெற்றுச் செல்வது - இதுதான் அவரது தொழில்.  A GREAT IDEA.

அருமையான ஒரு யோசனை. மனிதன் எப்படி எப்படியெல்லாம் யோசித்து, தொழில் பண்ணி, நேர்மையாக உழைத்து சம்பாதிக்கிறான்!

இந்த ஆண்டு (2010) தீபாவளி விழாவிற்கு தங்கள் வாடிக்கையாளர்களுக்கும் அன்பர்களுக்கும் இனிப்பு பரிசு அளிக்க விரும்பிய 3, 4 IT கம்பெனிக்காரர்கள், அருணை அணுகி 300 கிலோ இனிப்புகள் (லட்டு மற்றும் KAJU KATHLI) ஆர்டர் கொடுத்தார்கள்.

நான்கு சமையற்காரர்களை ஏற்பாடு பண்ணிக் கொண்டு, வேண்டிய சாமான்களை வாங்கிக் கொடுத்து, இந்த இனிப்புகளை தயார் செய்து ஆட்களை வைத்து பாக்கெட் பண்ணி, அருண் ஆர்டரை பூர்த்தி செய்தான். நல்ல லாபம். இதுதான் தொழில் நுட்பம்.

ராஜப்பா
31-10-2010
மாலை 8 மணி

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை