Skip to main content

பல்லாவரத்தில் நான்

சென்ற நவ 16 வெள்ளிக்கிழமை (அதாவது நேற்று) நான் பல்லாவரம் சென்றேன். சென்னை மாநகரில் ஒரு புறப் பகுதியான இது காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு நகராட்சியாகும்.

இங்கு சுபாவும், மகேஷும் ஒரு FLAT வாங்கி, அதற்கான கிருஹப்பிரவேசம் செய்தனர். நானும் விஜயாவும் திருவான்மியூருக்கு அருண் வீட்டிற்கு முதல்நாள் (15th) இரவே வந்து விட்டோம். காலையில் 4-45 க்கு எழுந்து, குளித்து, ஸௌம்யாவை எழுப்பி, நாலு பேரும் அருணுடைய புதிய காரில் புறப்படும்போது மணி 6-15.

பல்லாவரம் கிராமத்தை (ஆமாம், கிராமம்தான்) அடைந்த போது 6-45 இருக்கும். ஊரில் நுழைந்த பின்னர்தான் ஆரம்பித்தது தலைவலி. வீட்டுக்கு செல்லும் சரியான வ்ழியே தெரியவில்லை. ஒருவிதமாக ஊரை சுற்றி சுற்றி வந்தபின், வீடு தென்பட்டது - அப்பாடா! (எல்லாருமே இந்த கஷ்டத்தை அனுபவித்தனர் !)

வீடு நன்றாக இருக்கிறது. மின்வசதி, தண்ணீர் வசதி இன்னும் வரவில்லை. கிருஹப் பிரவேச விழா மிக நல்ல முறையில் நடந்தது. (சந்திரன் சாஸ்திரிகள் இல்லை). நிறைய உறவினர்களும், நண்பர்களும் வந்திருந்தனர். நாங்கள், அருண், காயத்ரி, ஸௌம்யா, கிருத்திகா, அதிதி. கிருத்திகாவின் அப்பா, அம்மா, சரோஜா, அத்திம்பேர், சத்யா, ஜெயராமன், கல்யாணி, பூர்ணிமா, ஆவடியிலிருந்து குமார் ஆகியோர் நம் பக்கத்திலிருந்து போயிருந்தோம்.

காலை டிபன். அய்யப்பன் தான் caterer. டிபனுக்குப் பிறகு சில பேர் கிளம்பிவிட்டனர். அருண், கிருத்திகா, அதிதி ஆகியோரும் டிபனுக்கு பின்னர் கிளம்பினர். நாங்கள் அங்கேயே இருந்து, பகல் உணவை முடித்துக் கொண்டு, பகல் 12-15 க்கு சரோஜா - அத்திம்பேருடன் அவர்கள் காரில் கிளம்பினோம். காயத்ரி - ஸௌம்யா இருவரும் சுகவனத்துடன் 3 மணிக்கு கிளம்பினர்.

இப்படியாக, சுபா - மகேஷின் கிருஹப் பிரவேசம் நல்ல முறையில் நடந்தேறியது. அவர்களுக்கு என் ஆசிகள் பல.

ராஜப்பா
7-30 மாலை, 17-11-2007

Comments

Unknown said…
உங்கள் ஆசிகளுக்கும் வருகைக்கும் இந்த பதிவுக்கும் நன்றி
SA Narayanan said…
அதெல்லாம் கிடக்கட்டும், போட்டோக்கள் எங்கே?
Unknown said…
சற்று கால தாமதம் ஆகிவிட்டது. போட்டோக்கள் இங்கே
I just wandered into this blog today. Just a slight correction on your "gruhappravEsam"
It should be written as "gruha" and not "graha". Gruha refers to house/place. Graha refers to planet, among other things. So getting into a new house should be referred to as 'gruhappravEsam"
Good luck!
SA Narayanan said…
அன்புள்ள ”நாரதரே”

உங்கள் இயற்பெயர் தெரியாததால்,
நாரதர் என அழைக்கிறேன், மன்னிக்கவும்.

“கிரகப் பிரவேசம்” என்பது தவறு என சுட்டி எழுதியற்கு, பல நன்றிகள். தவற்றை திருத்திக்கொண்டேன், நன்றி.

rajappa41 @gmail.com
Chennai-600028, 22 Jan 2009

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை