Skip to main content

பொன்னை விரும்பும் பூமியிலே ...

பொன் (GOLD) ஒரு சேமிப்பாக கருதலாமா? அல்லது, சேமிப்பு (investment) என்ற முறையில் தங்கம் வாங்குவது அவ்வளவு சிறந்தது இல்லையா? மனதிலே ஆயிரம் எண்ணங்கள். இருந்தும், துணிந்து நேற்று மாலை - என் 67 வருஷ வாழ்க்கையில், விஜயாவின் 59 வருஷ வாழ்க்கையில் முதல் முறையாக - தங்கம் (காசு) வாங்கினோம், ஓரிரண்டு கிராம்களே. எதற்கும் “முதல் முறை” வேண்டுமல்லவா?

பொன்காசு, மற்றும் பொன் நகைகள் வாங்கும்போது, பல சங்கேதக் குறியீடுகளை சந்திக்க வேண்டி வரும் - சேதாரம் (wastage) என்பது ஒன்று. தங்கத்தை உருக்கி நகையாக செய்யும்போது சில மைக்ரோகிராம்கள் நஷ்டமாகிவிடும்; இந்த இழப்பை நம்மிடமிருந்து பணம் வாங்கி ஈடு செய்து கொள்வார்கள். சேதாரம் என்பது செய்யும் நகையைப் பொறுத்தது. நாம் வாங்கும் கடையையும், அந்தக் கடைக்கு நாம் எவ்வளவு “விசுவாசமானவர்கள்” என்பதையும் பொறுத்தது. 15% லிருந்து 18% வரை சேதாரம் இருக்கக்கூடும். 16 கிராம் எடைக்கு நகை வாங்கினால், 16 கிராமுக்கு 15% ஆன 2.4 கிராம் தங்கத்திற்கு பணம் சேதாரமாக வசூலிக்கப்படும்!

அடுத்த குறியீடு “செய்கூலி” (making charges) என்பதாகும். இதுவும் மேற்சொன்ன 3 விஷயங்களையே பொறுத்தது. சாதாரண வேலைப்பாடுள்ள நகை என்றால் குறைவாகவும், நுணுக்கமான நகை என்றால் அதிகமாகவும் இருக்கும்.

பொன் காசு வாங்கும்போது, செய்கூலிக்கு பணம் தரவேண்டாம்; சேதாரத்திற்கு மட்டும் வசூலிப்பார்கள்; தற்போது இது 3% ஆக உள்ளது.

தங்கத்தின் விலை தினம் தினம் மும்பை மார்க்கெட்டில் நிச்சயிக்கப்பட்டு, மற்ற ஊர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. 18 ஜனவரி 2008ல் ரூ 1044; ஃபிப்ரவரி 21ல் ரூ 1127; மார்ச் 16 அன்று 1211. ஏப்ரல் 30 அன்று வீழ்ச்சி 1059.00; மீண்டும் மே 21 அன்று 1204.00; ஜூலை 14 அன்று 1267; பின்பு வீழ்ச்சி செப்டம்பர் 12ல் 1059.00; டிசம்பர் 19 அன்று ரூ 1194.00

இந்த வருஷம் (2009) விலை ஏறிக்கொண்டே போய், மார்ச் 22ஆம் தேதி 1435 ஆக இருந்தது. நேற்று (4-4-2009) 64 ரூபாய் வீழ்ந்து, 1371.00 க்கு விற்றது.

தங்கம் வாங்குவது சேமிப்பா, வீண்வேலையா? சேமிப்புத்தான்.

ராஜப்பா
10:45 காலை; 5 ஏப்ரல் 2009

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை