Skip to main content

ஸூர்ய தர்சனம் 06-02-2011

ஸூர்ய தர்சனத்தைப் பற்றி மஹாகவி ஏதேனும் எழுதியுள்ளாரா என சற்றுமுன் தேடினேன்; எழுதாமல் இருப்பாரா? இதோ அவரது  எழுத்தில்:

“பரிதியே பொருள் யாவிற்கு முதலே, - பானுவே, பொன்செய் பேரொளித் திரளே, ”

“கடலின் மீது கதிர்களை வீசிக் கடுகி வான்மிசை ஏறுதியையா
படரும் வானொளி யின்பத்தைக் கண்டு பாட்டுப் பாடி மகிழ்வன புட்கள் ..”


இன்று (06-02-2011, ஞாயிறு) காலை 6-40க்கு வங்கக் கடலிலிருந்து எழும்பிய ஸூரியனின் பொன்னிற தகத் தகவென்று ஒளிவீசும் அந்த அற்புதக் காட்சியை கண்டு மனம் பறி கொடுத்தேன். தினம் தினம் பார்த்தாலும் சலிக்காத, மனசுக்கு நிம்மதி தரும் இயற்கையின் பேரழகு அது. எத்தனை கோடி இன்பம் வைத்தாய், இறைவா!

ஏதோ நான் மட்டும்தான் ஸுரிய தர்சனத்தை கண்டு மகிழ்கிறேன் என்று எண்ணியிருந்தேன் - இன்று காலை சுமார் 10 பேரை பார்த்தேன் - எல்லாரும் ஸூரியனின் பொன்செய் பேரொளித் திரளில் மனம் மயங்கி ஸூரியனையே பார்த்துக் கொண்டு இருந்தனர். இன்னும் 10 பேர் ஸூரியனைக் குறித்து ஸ்லோகங்கள் (ஆதித்ய ஹ்ருதயம்?) சொல்லிக் கொண்டிருந்தனர். நேற்று காலை முன்பின் தெரியாத ஒருவர் காரிலிருந்து இறங்கி ஓடிவந்து எங்கள் பக்கத்தில் நின்று “ஓ, What a beauty! Fantastic", என ஆங்கிலத்தில் என்னிடம் சொன்னார்; தினமும் வருவாராம்.

”அகிலம் முழுமைக்கும் பிரகாசம் தருகின்ற, ஸுரியனின் ஒளி என்னிடத்திலிருந்துதான் வருகிறது” - கீதையில் ஸ்ரீ கிருஷ்ணன் கூறியது. ஸூரியனைப் பார்க்கும் போது, வணங்கும் போது கீதையின் இந்த ஸ்லோகத்தை தான் நான் சொல்லிக் கொண்டிருப்பேன்.

ராஜப்பா
காலை 10:45 மணி
06-02-2011

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை