Skip to main content

ஸ்ரீமத் பாகவதம் - 339

ஸ்ரீமத் பாகவதம் உபன்யாஸத்தின் 339-வது பகுதி இன்று (28 ஃபிப்ரவரி 2011) நடந்தது. இன்று ஸ்ரீராமர் ஜனனம் சொல்லப்பட்டது.

இக்ஷ்வாகு வம்ஸத்தில் பகீரதனுக்குப் பின்னர் வந்த அஜர் என்பவருக்கு தசரதன் பிறந்தார். ரிஷ்யசிருங்கர் மூலமாக தசரதன் செய்த புத்திரகாமேஷ்டி யாகத்தில் பாயஸக் குடம் வந்தது. அந்த பாயஸத்தை தசரதன் இரண்டாகப் பிரித்து  ஒரு 1/2 பாகத்தை கௌஸல்யாவிற்கு கொடுத்தார்; மீதமிருந்த 1/2 பாகத்தை மீண்டும் இரண்டாக பிரித்து (அதாவது மொத்தத்தில் 1/4 பாகத்தை) கைகேயிக்கும், மீதமிருந்த 1/4 பாகத்தை இரண்டாக பிரித்து (1/8 பாகம்)  இரண்டையும் ஸுமித்ரைக்கும் கொடுத்தார்.

கௌஸல்யாவிற்கு ஸ்ரீராமரும், கைகேயிக்கு பரதனும், ஸுமித்ரைக்கு லக்ஷ்மணன், சத்ருக்னன் ஆகியோரும் பிறந்தனர். குழந்தைகளுக்குப் பெயர் வைக்க வந்த வஸிஷ்டர் இரண்டு குழந்தைகள் (லக்ஷ்மணன், சத்ருக்னன்) அழுவதைக் கண்டார்.  ராமன் பக்கத்தில் தான் இல்லையென்று லக்ஷ்மணனும், பரதன் பக்கத்தில் தான் இல்லையென்று சத்ருக்னனும் அழுதனராம். ராமன் இருந்த அதே தொட்டிலில் லக்ஷ்மணனையும், பரதன் இருந்த தொட்டிலில் சத்ருக்னனையும் விட்டபிறகுதான் அழுகை ஓய்ந்ததாம்.

அன்று முதலே ராமனின் நிழலாக லக்ஷ்மணன் எப்போதும் ராமனின் அருகிலேயே இருந்து ராமனுக்குப் பணிவிடைகள் செய்வதையே தன் கடமையாக செய்துவந்தான் என்பது யாவரும் அறிந்ததே.

இன்று காலையில் வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் ஸ்ரீராம ஜனனத்தை விவரிக்கும் போது மனசுக்கு என்ன நிம்மதியாக இருந்தது தெரியுமா? பக்தி பரவசத்தை அனுபவித்தால் தான் புரியும்.

ஸ்ரீராம சரித்திரம் இன்னும் தொடரும். எல்லாருக்கும் ராம-லக்ஷ்மண-ஜானகியின் அருளாசி கிட்டட்டும்.

ராஜப்பா
28-02-2011
காலை 9:45 மணி

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை