Skip to main content

திருவனந்தபுரம் க்ஷேத்ர மஹாத்மியம் - வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள்


வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் முந்தாநாளும், நேற்றும் (31-03-2012 மற்றும் 01-04-2012) அடையாறு ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி கோயிலில் மாலை 6-30க்கு “திருவனந்தபுரம் க்ஷேத்ர மஹாத்மியம்” என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் உபந்யாஸம் செய்தார்.

31-ஆம் தேதியன்று விஜயாவும் நானும் சென்றோம். 5 மணிக்கே சென்று முதல் வரிசையில் இடம் பிடித்து உட்கார்ந்து விட்டோம். 6-30க்கு ‘எள் போட்டால் எள் விழாத’ அளவிற்கு கூட்டம் நிரம்பி வழிந்தது.

நிறைய விஷயங்கள் சொன்னார். பெருமாளை தரிஸிக்க ஏன் மூன்று த்வாரங்கள் என்பதை விளக்கினார். முதலில் திருவடிகள், அடுத்து நாபிக்கமலம், இறுதியில் திருமுடி (திருமுகம்) என தரிஸிக்கும் முறையை சொன்னார்.

அனந்த காடு குறித்த வரலாறையும், தேங்காய் சிரட்டையில் அரிசி நொய்க் கஞ்சி, உப்பு மாங்காய் ஏன் நைவேத்யமாக ஸ்வாமிக்கு சமர்ப்பிக்கப் படுகிறது என்பதற்கான வரலாற்றை கூறினார். இன்னும் பல பல விஷயங்களை சொன்னார். 2 மணி நேரம் போனதே தெரியவில்லை.

ஏப்ரல் 1-ஆம் தேதி நாங்கள் போகவில்லை. கோயில் இருக்கும் ரோடையே அடைத்து விட்டு அங்கும் நாற்காலிகள் போட்டு பக்தர்களை உட்கார்த்தி வைத்தனர் எனவும், இதுவும் போதாமல் கூட்டம் அலைமோதியது எனவும் பின்னால் அறிந்தோம்.

ராஜப்பா
1-4-2012
1000 மணி

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை