Skip to main content

Fall - its sequel.


ஏப்ரல் 10, 2012 செவ்வாய்க்கிழமை தெருவில் திடீரென விழுந்ததையும் ஸ்வரம் ஹாஸ்பிடலில் ஒருநாள் இருந்ததையும் “ALL NORMAL, ஒன்றும் இல்லை” என டாக்டர்கள் சொன்னதையும் முன்பே எழுதினேன்.11-ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்தனர்.

12-ஆம் தேதி காலை CGHS சென்றோம். டெஸ்ட் ரிசல்ட்டுகளை பரிசீலித்து விட்டு, “ஒன்றும் இல்லை” என இந்த டாக்டரும் (டாக்டர் பார்த்தஸாரதி) சொன்னார். Aspirin Tablet STROMIX கொடுத்தார். ஏப்ரல் 21-ஆம் தேதி (சனிக்கிழமை) டாக்டர் மாதவனிடம் சென்று காண்பித்தோம். அவரும் ஒன்றுமில்லை எனக் கூறினார்.

ஒரு CT Scan of Brain (plain) எடுத்து வரும்படி சொன்னார். மீண்டும் CGHS இந்திராநகர் 23ஆம் தேதி சென்று, அந்த டாக்டர் மூலமாக scanக்கு PRECISON DIAGONOSTIC LAB, MG ROADற்கு சீட்டு வாங்கிவந்தோம். CGHS மூலமாக் சென்றால் எல்லாம் இலவசம் - சுமார் 3300.00 ரூ மிச்சம் !

ஏப்ரல் 25, 2012 புதன்கிழமை காலை 10 மணி சுமாருக்கு காரில் விஜயாவும் நானும் PRECISION Labற்கு சென்றோம்; அரை மணி கழித்து என்னை Scan அறைக்கு அழைத்தனர். படுக்க வைத்து BRAIN SCAN பண்ணினார்கள். 10 நிமிஷத்தில் முடிந்தது. 11-45க்கு காரில் வீடு திரும்பினோம். சாயங்காலம் 5 மணிக்கு விஜயா சென்று ரிப்போர்ட் வாங்கிவந்தாள்.

இந்த ரிப்போர்ட்டுடன் டாக்டர் மாதவனை மாலை 7-30க்கு பார்த்தோம். எல்லாம் நார்மல் எனக் கூறிய டாக்டர் மாதவன், என்னை அதிக ஜாக்கிரதையுடன் இருக்கும்படி சொன்னார். சில மாதங்களுக்கு, தனியாக எங்கும் போகவேண்டாம், எப்போதும் யார் துணையோடு போக வேண்டும் என சொன்னார். ஒரு முன் ஜாக்கிரதை (Pre-Caution) என்றார். Lead a Routine Life, Resume all your Normal workload, You Are Fine, he said.

ஏப்ரல் 14 முதலே என்னுடைய வழக்கமான் வேலைகளை தொடங்கினேன். காலை 4-15க்கு எழுந்திருப்பதை மாற்றி. 5-15 அல்லது 5-30க்கு எழுந்து குளிக்கிறேன். பாராயணங்கள் முழுதும் சொல்வதில்லை. காய்கறி மார்க்கெட்டிற்கு இப்போது விஜயா என்னுடன் துணை வருகிறாள். STROMIX aspirin Tablet தொடர்கிறது.

எல்லாம் ஆண்டவன் அருள். அவனுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்.

ராஜப்பா
மாலை 6 மணி
26-4-2012

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை