Skip to main content

குமாரராஜா முத்தையா இசையரங்கம் Chettinad Vidhyashram

குமாரராஜா முத்தையா இசையரங்கம், ராஜா அண்ணாமலைபுரம்

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் (எங்கள் வீட்டிற்கு அருகில்) செட்டிநாடு வித்யாஷ்ரம் (Chettinad Vidhyashram) என்ற புகழ்பெற்ற ஒரு ஸ்கூல் உள்ளது. ராஜா அண்ணாமலை செட்டியார் அவர்களின் வம்சத்தினர் இந்த் ஸ்கூலை நிறுவி, நிர்வகித்து வருகின்றனர். (ஏரியா பெயரே ராஜா அண்ணாமலைபுரம் !!)

இந்த ஸ்கூலில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 முதல் 15 வரை தினம்தினம் கர்னாடக இசைக்கலைஞர்களை கூப்பிட்டு கச்சேரிகள் நிகழ்த்துகிறார்கள். பாடுபவர்கள் எல்லாருமே மிகப் புகழ்பெற்றவர்கள் ! அனுமதி இலவசம். பல கச்சேரிகளுக்கு கூட்டம் அலைமோதும். தொட்டுவிடும் தூரத்தில் உள்ள வங்கக்கடலுக்குப் போட்டியாக இங்கும் ரசிகர்கள் கடல் இருக்கும். 6-30 மணிக்கு ஆரம்பமாகும் கச்சேரிக்கு 4-30 மணிக்கே கூட்டம் பிதுங்கி வழியும். (இது எல்லா கச்சேரிகளுக்கும் பொருந்தாது.)

பெரிய்ய பார்க்கிங் ஏரியா. நிறைய கார்களை தாராளமாக நிறுத்தலாம். இருந்தும், சில கச்சேரிகளுக்கு வரும் கார்கள், இந்த பார்க்கிங்கும் போதாமல், துணை ரோடு, மெயின் ரோடு .... என கார்கள் நிறுத்தவே இடம் போதாது. (இந்த கார்களில் வருபவர்களுக்கு எதற்கு அனுமதி இலவசம்? ஆளுக்கு 10 ரூபாய் டிக்கெட் வைத்தாலும், சுளுவாக 10000.00 க்கு மேல் வசூலாகுமே? ஏதாவது அனாதை ஆஸ்ரமத்திற்கு அன்பளிப்பாக கொடுக்கலாமே? - இவை என்னுடைய நெருடல்கள்.)

பெரிய அரங்கு; Fully air-conditioned; எல்லா வசதிகளும் நிரம்பியது. Excellent acoustics. பாடுபவர்கள் தமிழ்நாட்டின் #1, #2, #3 என்னும் பாடகிகள்/பாடகர்கள். அனுமதி இலவசம். இவை போதாதா கூட்டம் வர?

ஒவ்வொரு ஆண்டும் விஜயா 4-5 கச்சேரிகளுக்கும் நான் 1 அல்லது 2 கச்சேரிகளுக்கும் செல்வது வழக்கமாகி விட்டது. வீட்டிலிருந்து 15 நிமிஷ நடை.

ராஜப்பா
6:20PM 12 Dec 2008

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை