Skip to main content

ஹோட்டலில் சாப்பாடு Hotel Meals

ஹோட்டலில் சாப்பாடு - Hotel Amavaravathy, TTK Road

ரொம்ப நாளாகவே ஹோட்டலுக்குப் போக வேண்டும், முழு சாப்பாடு சாப்பிட வேண்டும் என ஆசையாக இருந்தது. சமீபத்தில், அக்டோபரில் கோயம்பத்தூரில், ஊட்டியில் சாப்பிட்டோம் என்றாலும், சென்னையில் சாப்பிட வேண்டும் என்பது என் ஆசை - அதுவும் ஆந்திரா மீல்ஸ் சாப்பிட ஆசை.

டிச 27 (சனிக்கிழமை) காலை இந்த என் எண்ணத்தை சொன்னவுடன், அர்விந்த், விஜயா ஆகியோர் உடனே ஒத்துக் கொண்டனர். அஷோக்கும், நீரஜாவும் பெங்களூரிலிருந்து சென்னை வந்திருந்தார்கள். அவர்களும் வர சம்மதித்தனர். அவர்கள் அருண் வீட்டிலிருந்து, காயத்ரி, ஸௌம்யா, ஸ்ரீராம் ஆகியோரை அழைத்துக் கொண்டு அருண் காரில் வருவதாக சொன்னார்கள்.

7 பேரும், 3 குழந்தைகளுமாக இரண்டு கார்களில், ஹோட்டல் அமராவதிக்குச் சென்றோம். ஆழ்வார்பேட்டை TTK வீதியில், ம்யூசிக் அகாடெமி அருகில் உள்ளது இது. ஆந்திரா சாப்பாட்டிற்கு இது புகழ்பெற்றது.

ஆந்திரா பருப்பு சாதத்தில் ஆரம்பித்து, கீரை, சாம்பார், காரக்குழம்பு, ரசம், 2 வித பொரியல், பருப்புப் பொடி, அப்பளம், வடாம், தயிர், கோங்கூரா சட்டினி, ஆவக்காய் ஊறுகாய், ஜாங்கிரி, வாழைப்பழம், பீடா என சாப்பாடு பரிமளித்தது. எல்லாரும் நன்றாக சாப்பிட்டோம். ரூ 99/- மட்டுமே! பில் நான் தான் பணம் கொடுத்தேன்.

அஷோக், நீரஜா, காயத்ரி, ஆகியோர் அங்கிருந்தே அருண் வீட்டிற்கு காரில் போனார்கள். நாங்கள் இங்கு வீடு திரும்பினோம். நாள் இனிமையாக கழிந்தது.

ராஜப்பா
28-12-2008 மாலை 4 மணி

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை