Skip to main content

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் Velukkudi Krishnan Swamigal


ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் தினந்தோறும் காலை 6-30 முதல் 6-45 வரை தெள்ளிய தமிழில் கீதை உபன்யாஸம் செய்து வருவது (பொதிகை டிவியில்) தெரிந்ததே. 2007 ஜனவரி 18 ஆம் தேதி வியாழனன்று உபன்யாஸம் துவங்கியது. இரண்டு வருஷங்கள் ஆகப்போகின்றன.

இவரைப்பற்றியும் இவரது கீதை உபன்யாஸத்தைப் பற்றியும் ஏற்கனவே நான் 02-01-2008 அன்றும், 18-01-2008 அன்றும் எழுதியுள்ளேன். முதல் பதிவு இங்கேயும், அடுத்தது இங்கேயும் படிக்கவும்.

இந்த 2008 டிசம்பர் 12 வெள்ளியன்று அவரது 500வது சொற்பொழிவு! கீதையின் 12வது அத்தியாயம் முதல் ஸ்லோகம் சொல்லுகிறார்.

500 சொற்பொழிவுகளில் 475 க்கும் மேலாக விஜயாவும் நானும் விடாமல் கேட்டுக்கொண்டு வந்துள்ளோம். முதலில், இரண்டு நாட்கள் குளிக்காமல் கேட்ட நான் பின்னர் 6 மணிக்கு தினமும் குளித்துவிட்டு கேட்க ஆரம்பித்தேன். 6 மணிக்கு என்பது கொஞ்சம் கொஞ்சமாக 5-45, 5-30, 5-00 மணியென சீக்கிரமாக எழுந்துகொண்டு உடனே குளித்து ... என மாறியது. சென்ற இரண்டு மாதங்களாக இது 4-30 அல்லது 4-45 என இன்னும் சீக்கிரமாக மாறியுள்ளது.

இந்தமாதிரி ஒரு நியமமும், மனக்கட்டுப்பாடும் எனக்கு எப்படி வந்தது? யார் அருளியது? ஸ்ரீ கண்ண பரமாத்மாவும், ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணனும் தான் !! அவர்கள் பாதாரவிந்தங்களில் என் நமஸ்காரங்களை சமர்ப்பிக்கிறேன்.

ராஜப்பா
12 Dec 2008 1000 AM

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை