Skip to main content

விஜயா திருச்சி போனாள். 14-02-2014

தோழிகள் மூவருடன் விஜயா 14 ஃபிப்ரவரி 2014 அன்று காலை 7-40 ரயிலில் திருச்சி கிளம்பினாள். ஏற்கனவே இன்னொரு டிக்கெட்டும் மார்ச் மாஸத்திற்கு வாங்கி அதை கான்சல் செய்தோம்.

எழும்பூரில் அவள் Mrs KOIKILA வை சந்தித்து இருவருமாக ரயிலில் ஏறினர். தாம்பரம் ஸ்டேஷனில் Mrs DEVASUNDARI, Mrs PREMA இருவரும் சேர்ந்து கொண்டனர்.

ஓடும் ரயிலில் காலை சிற்றுண்டியை சாப்பிட்டனர். திருச்சி, ஸ்ரீரங்கத்திற்கு மதியம் 1-30க்கு அடைந்தனர். தேவசுந்தரி அவர்களின் நண்பர் வீட்டில் தடபுடலான விருந்து சாப்பாடு. பின்னர் ஒரு டாக்ஸி எடுத்துக் கொண்டு பல கோயில்களுக்கு சென்றனர்.

15-ஆம் தேதி சனிக்கிழமையும் டாக்ஸியில் கிளம்பி நிறைய கோயில்கள் பார்த்து ஸ்வாமி / அம்மன் தரிஸனம் பண்ணினர். அன்றும் அந்த வீட்டில் தூங்கினர்.

16-ஆம் தேதி ஞாயிறு காலை 6-30  பல்லவன் ரயிலில் கிளம்பி, தாம்பரத்தில் 11-45க்கு இறங்கினர். விஜயா மட்டும் T21 பஸ்ஸில் பயணித்து திருவான்மியூர் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

திருச்சியில் அவர்கள் தரிசித்த கோயில்கள் ---

14-02-2014 சனிக்கிழமை

1)   திருவாச்சூர் மதுர காளியம்மன் கோயில்
2)  செட்டிகுளம் (முருகன்)
3)   திருப்பட்டூர்
அ)  பிரம்ஹபுரீஸ்வரர் கோயில்
ஆ)  காசி விஸ்வநாதர் கோயில்
இ)  வரதராஜர் கோயில்
4)  உத்தமர் கோயில்
5)  சமயபுரம் மாரியம்மன் கோயில்.


15-2-2014 ஞாயிறு

1) உச்சி பிள்ளையார் கோயில்
2)  வயலூர் ஆதிநாதர், முருகன் கோயில்
3)  உறையூர் வெக்காளியம்மன் கோயில்.
4)  நாச்சியார் கோயில்.
5)  குணசீலம்
6)  திருப்பைஞ்ஞீலி சிவன் கோயில்
7) திருவெள்ளறை புண்டரீகாக்ஷ பெருமாள்.
8) திருவானைக்கா
9)  ஸ்ரீரங்கம்


ராஜப்பா
17-02-2014

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

Lagnam And How to Select an Auspicious Muhurtham

லக்னம் அமைப்பது எப்படி ? எந்த காரியத்திற்காக எந்த ராசியை தேர்ந்தெடுக்கிறோமோ அதுவே லக்னம் ஆகும். (தேர்ந்தெடுக்கும் வரை ராசி தேர்ந்தெடுத்த பின்னரே லக்கினம்). ஒவ்வொருநாளும் ஒரு குறிப்பிட்ட ராசியின் குறிப்பிட்ட டிகிரியில் சூரியன் உதிக்கிறார் என்பதையும், ஒரு டிகிரிக்கு 4 நிமிடம் வீதம் 1440 நிமிடங்களில் அதாவது 24 மணி நேரத்தில் ராசி மண்டலம் முழுவதையும் சூரியன் கடக்கிறார் என்பதையும் பார்த்தோம். பூமி சூரியனைச் சுற்றும் பாதையில் சற்று முன்னேறி விடுவதால் முதல் நாள் உதித்த அதே இடத்தில் அன்றி சூரியனும் சற்றுத் தள்ளி உதிக்கிறான் என்பதையும் அறிந்தோம். இந்தத் தள்ளுதல் ராசி இருப்பில் சராசரியாக 4 நிமிடங்களைக் குறைக்கும் என்பதையும் அறிந்தோம். கோசாரம் என்பது க்ரஹங்களளின் தற்கால நிலையைக் குறிக்கும். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு, கேது ஆகிய அனைத்து க்ரஹங்களுமே சூரியனை முன்னோக்கியோ பின்னோக்கியோ ஒரு குறிப்பிட்ட தனக்கே உரித்தான வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இதனால் அந்தந்த க்ரஹங்கள் ராசி மண்டல்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் எந்த இடத்தில் இருக்கின்றன என்பதைக்...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011